இருப்பது தெரியாமல்
இருட்டில்
மோதிக்கொள்கிறேன்
பார்த்து சிரிக்கிறது
சுவர்
மூடநம்பிக்கையில்
மூழ்கி
முடமாகிப்போன
மனச்சிதைவுகளை
குணப்படுத்த வேண்டும்
முதலில் நான்
பிறகுதான்
அந்தச் சுவருக்கு
மதியிழந்து
விழி மழுங்கிப் போன
வெற்றுடம்புக்கு
தேவை முதலில்
வெளிச்சம்
நானே
எனக்கான தீப்பந்தமாய்
மாறிட வேண்டும்
நான்கு சுவர்களுக்குள்
எச்சங்களாய்
சிந்தனை சிறகில்லாமல்
அடிமைச் சின்னமாய்
அவதரித்திருக்கிறேன்
ஒரு சுவர் வந்து
முட்டியதால்
வலியில்லை மனதிற்கு
அத்தனை சுவர்களும்
நெற்றியை
பதம்பார்த்தாலும்
நானொரு
கற்சிலையாய்
பாருங்களேன்
சுவர் வந்து
என்னை தாக்கியதாய்
பழிதீர்த்து
பதுங்குகிறேன்
வெளிச்சம் சுவருக்கு
வேண்டாம்
என் அறிவுக்கு
வேண்டும்
பார்வையை
திசைதிருப்பி
படிப்பறிவில்
நானுழைய
தொலைத்து நின்ற
சிந்தனைகளை
தேடிப் பிடிக்கின்றேன்
வெளிச்சத்தில்
நான்கு சுவர்களிலும்
வரைந்த சித்திரங்கள்
நான் முட்டிய
சுவருக்கு ஒரு முத்தம்
வெளிச்சம் பிறந்த
கொண்டாட்ட
குதூகலத்தில்
விளைவுகள்
அதுவாக,,,
Sunday, November 15, 2015
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment