நானாக என்னுள்
நீயாக
நம்மில் மெய்யாக
உயிரின் அர்த்தங்களை
உள்ளங்கையில்
சேகரித்திருக்கிறோம்
செங்காந்தள் மலராக
சீமை விளக்காக
ஞானப் பொருளாக
நமக்குள்ளே
காதல் வீதியுலா
வருவதற்கு வாழ்க்கை
கனவுகளை தீர்மானித்து
வைத்திருக்கிறோம்
வந்ததும் சென்றதும்
வரப்போவதுமாக
நிஜங்களை விழுதுகளாக நிழல்களை இரவாக
இமைகளின் இம்சைகளாக
ஒன்றிக் கலந்து
உறவாடும் உன்னத
பரிமாற்ற நிகழ்வுகளை
பக்குவப்படுத்தி
வைத்திருக்கிறோம்
வாழலாம் வாவென
அழைக்கிறாய்
வசந்தமாய்
வருகிறேனென
இசைகிறேன்
மலர்தேடும் தேனீக்கள்
மழைதேடும் மயில்கள்
இசைதேடும் குயில்கள்
நிலவுதேடும்
விண்மீன்கள்
கடல்தேடும் நதிகள்
இரைதேடும் பறவைகள்
இன்பமாய் நமை
வாழ்த்திட வருகின்றன
வரிசையில்
ஊடலும் கூடலும்
உன்னத காமச்சிறு
புனலும் காதலை
புகழ்ந்து பாடுகையில்
கண்ணெதிரே ஆடும்
கரிச்சாங்குருவிகளின்
மேள தாளங்களோடு
நம் திருமண முடிச்சுகள்
நமக்கே நமக்கான
நலின மயமான
வாழ்வியல் வாசலில்
வலதுகால் வேண்டாம்
இஷ்டப்படி உள்ளே வா
நம் உறவும் காதலும்
உண்மையதனால்,,,
பிரளயங்கள்
சடங்குகளின்
சந்ததிகளை அழிக்கும்
அழகே முத்துச்சிமிழே
முல்லை மலரே
வர்ணிக்கிறேன்
உனை நானும்
அழகா ஆண்மைப்
பேரழகா அகிலத்து
வானழகா
என்னிமைகளின்
ஏட்டழகனே
என்னையும் பெண்ணாக
மதித்தவனே மன்னவனே
வர்ணிக்கிறாய்
எனை நீயும்
இப்படியே
கடந்துபோகாதோ
யுகங்கள் பலவென்று
ஏங்கித் தவிக்கிறேன்
எழுதி முடித்த
கவிதையில்
இறுதி மூச்சாக நீ!
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment