இன்று ஆண்கள் தினமாம்
யார் ஆண்கள்? எது ஆண்மை என்று இன்றளவும் தீர்மாணிக்கப்படவில்லை " காளை
போல் கட்டுடலோடும் ,விந்துக்கள் சீறிப்பாயும் விவேகத்
துடிப்போடும்,முறுக்கு மீசைகள் கம்பீரத்தோடும் வலம் வருவதுதான் "ஆண்மை
அழகு" என்கிறார்கள் பொதுபுத்திக்காரர்கள். எது ஆண்மையென காட்ட ஆணின்
ஆயுதம் பெண்மைமீது பிரயோகப்படுத்தப்படுகிறது, நாட்டாமை என்கிற
திரைப்படத்தில் ஓர் வசனம் "ஒரு ஆம்பள எத்தன பொம்பளகிட்ட போனாலும் அவன்
ஆம்பளடி,ஒரு பொட்டச்சி பலபேர்கிட்ட போனா அதுக்கு பேரு வேறடி!" வசனம் நம்ம
தமிழ்நாட்டு திரைப்படமே தான், இதுதான் "ஆண்மை" என கற்பிதம் பெற்ற அறிவு
மழுங்கிய கத்தியாகத்தானே இருக்கும். "கற்பை பொதுவில் வைக்க மறந்தவர்கள்
நாம்" இன்னும் அப்படியே தொடர்கிறது ஆண்மை என்பது ஓர் ஆணாதிக்கமாய்,,,
வழக்கமாக எழுதும் கவிதை நோட்டினை புரட்டிப்பார்த்தேன் , சட்டென கண்ணில்
பட்டது என் பேனா கிறுக்கிய கவிதையொன்று,
"ஆ(ண்)மை"
பின்தொடர்ந்து
பின்தொடர்ந்து
பின்தொடர்ந்து
என் முதுக்குக்கு
பின்னாலே
அலைகிறார்கள்
பித்து பிடித்தவர்களாய்
மெதுவாக பயணிக்கும்
ஆமைகளாய்
என் தாயும்
என் மனைவியும்
என் மகளும்
என் மருமகளென
முன்தடையும்
பின்தடையும்
வரைந்த நான்
அவர்களின்
பாதைக்கு
தடைக்கல்லாய்
நானொரு
ஆண்மகனாய்
அவர்களை
முன்னோக்கிப்
போக விடாமல்
முனைப்புடன்
பார்த்துக் கொண்டேன்
எப்படி முடிந்தது
என்னால்
சர்வசாதாரனமாய்
அவர்களை
அடிமைபடுத்திய
அக்குற்றவுணர்ச்சி
அற்றவனாய்
நடிக்கவும், இயல்பாய்
நடக்கவும்,
பழகிப்போயிருந்தது
என்னுள் அந்தப்
பழமைவாதம்
என் குணத்தோடுமது
ஒட்டியே
இருந்திருக்கிறது
அதனாலே
நான்
நடிக்கிறேன்
நடித்துக்
கொண்டிருக்கிறேன்
நடிப்பேன்
நானொரு ஆண் எனும்
ஆண்மைக்காரனாகி
அகங்காரத் திமிரோடு,
இதிலிருந்து மாறுப்பட்டவர்களுக்கும்
மாற முற்படுபவர்களுக்கும்
மாற்றமில்லா மனதுக்காரர்களுக்கும்
ஆண்கள் தின வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment