Sunday, November 01, 2015

மதுவை துறந்து தேனை அருந்து!

இன்றைய சூழலில் நகரமாதலால் அழியக்கப்படும் இயற்கையினால் தேனும் அழிந்து
போகும் சூழல் உறுவாகியுள்ளது ஆதலால் பல வேதிமுறைகளிலும் இன்னும் பல
செயற்கை முறைகளாலும் போலியாக தேன் தயாரிக்கப்படுகின்றது. ஆகவே தரமான தேனை
கண்டுபிடிக்கும் வழிமுறைகளும் தேனின் குணாதிசயங்களும் நாம் அறிய
வேண்டியது இம்முறையே!

1.ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீர் ஊற்றி, ஒரு கரண்டியில் தேனை எடுத்து
சிறிது சிறிதாக ஊற்றினால், நல்ல தேன் கம்பிபோல் நீரில் இறங்கும்.
சர்க்கரை பாகு கலப்படம் செய்யபட்டிருந்தால் அது நீரில் கரையும்.

2.சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும்
ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப்பெட்டியில் பற்ற வைக்க
வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை
என்பதை அறிய வேண்டும்.

3.மை உறிஞ்சும் காகிதத்தில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள்
வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது.

தேனின் குணங்கள்:
தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு
எதிரான பண்புகள் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அதனால்
இது வெட்டு காயங்கள், சிராய்ப்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த
உதவுகின்றது.

தேனை சருமத்திற்கு உபயோகித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை
நீக்கி, சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

சுருக்கம் மற்றும் வெடிப்புகள் நிறைந்த உதடுகளில் தேனை தொடர்ந்து தடவி
வந்தால், உதடுகள் பட்டு போல மிருதுவாகும்.

சூடான நீரில் ஒரு தே‌க்கர‌ண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாற்றுடன், ஒரு
தே‌க்கர‌ண்டி தேன் சேர்த்தீர்களானால் இஞ்சிச்சாறு ரெடி. இது
நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிலிருந்து ‌நிவாரண‌ம் அ‌ளி‌க்கு‌‌ம்.

உட‌ல் மெ‌‌லி‌ந்தவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் பா‌லி‌ல் தே‌ன் கல‌ந்து
சா‌ப்‌பி‌ட்டு வர உட‌ல் வாகு ‌சீராகு‌ம்.

அடிக்கடி ச‌ளி பிடித்தால், இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு
ஸ்பூன் தேனை கலந்து தினமும் பருக வேண்டும்,

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில்
காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து
தேனீக்கள் தேனை பெறுகின்றன.

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து
அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல்
ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

4. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா
உபாதையிலிருந்துதப்பலாம்.

5. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும்
பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல்
மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும்
சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

7. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும்
சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

8. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள்
மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

9. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட,
கீழ் வாதம் போகும்.

11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால்
வலி நீங்கும்.

12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த்
தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை
நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த
விருத்தியும் ஏற்படும்.
நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத்
தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப்
பிணிகளையும் நீக்கமுடியும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால்
தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன்
சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை
எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல்
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும்.

குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால்
ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய
பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும்.

புதிய இரத்தம் உடம்பில்
பாய்ந்தோடும்.

18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள்
சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன்
வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்
குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் மதுவை துறந்து தேனை தினமும்
அருந்துங்கள் . தேன் மிகப்பெரும் பொக்கிஷமாக நமக்கு வாய்த்திருக்கிறது.
மனிதனின் உணவுத் தேடலில் தேனை அவன் கண்டுபிடித்தது மகத்தான ஒன்றாகும்.
நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும்
தேனை அருந்திவர வேண்டும்.தேனின் சுவையும் அதன் குணாதிசயங்களும் ஓரளவிற்கு
மதுப்பழக்கத்தை மறக்கடிச்செய்கிறதென்றும் கூறப்படுகிறது.

2 comments:

  1. தேனான செய்தி துளிகள்.

    பகிர்விற்கு நன்றியும் 300 தொட்டதற்கு வாழ்த்துக்களும்.

    கோ

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...