மெல்ல மெல்ல
ஆடைகளை அவிழ்த்து
என் மேனிதனை தழுவி
காற்றின் மென்மையாக
படர்கிறான் அவனொரு
கொடிமலர் போல
மோகம் துளிர்த்து
மனதை தளர்த்தி
மெய்சிலிர்த்து
எனனுள்ளே
அனலாய் ஏறும்
காம இச்சைதனை
உச்சி முகர்ந்தேன்
உச்சந்தலையில்
ஓங்கி விழந்தன
அதிர்வலைகள்
இன்பக்கடலில்
உணவு தேடும்
உணர்சியின்
மறுவேகத்தடையாக
ஏதோவொன்று
அவ்வப்போது
அலைபாயும்
சங்கடத்தில்
இருந்தும் நான்
பாய்விரிப்பில்
அப்படியே
அரைநிர்வாணமாய்
சங்கடச்செய்தி
விஷ்வரூபமெடுக்க
திணருகிறேன்
என்னை உள்ளே
தள்ளிவிட்டு
விடுக்கென
வெகுண்டெழுகிறது
வேட்டையாடும்
பருந்தொன்று
பட்டென
தன் அலகால்
என்னையது கொத்திவிட
அதிர்ந்து எழுகிறேன்
அத்தனையும் கனவாக
தூக்கம் தொலைத்து
என் துக்கம்
தொண்டையில்
உச்ச இன்பம்
உருகுலைந்து போனதில்
உருவத்து நிழல்களை
எல்லாம் வெறிகொண்டு
திட்டுகின்றேன்
திருட்டுத் தனமாக
என் கனவுக்குள்
நுழைந்து வேட்டையாட
வந்த பருந்தையும்
சேர்த்து
மீண்டும் படுத்தாலும்
பாய் விரிப்பில்
புரண்டாலும்
என் மீட்புக்காரன்
வர மறுக்கிறான்
காமம் கருவிழி எனில்
காதல்
கண்னிமையன்றோ
ஊடறுக்கும் ஓர் இரவில்
ஊடலுக்கும் கூடலுக்கும்
அவன் மெய்ப்பொருள்
காண்கிறான்
என்னுள் அவன்
எதிரே நிற்கிறான்
என் மனசாட்சியை
எப்படி படித்தது
இந்த கடலைகள்
என் கனவினில்
முளைத்த காமக்
களியாட்டங்களின்
உடலசைவுகளையும்
உள்ளத்து
அதிர்வுகளையும்
கடற்கரை மணலிடத்தில்
அப்படியே செய்கிறதே
எனும்
அதிசயத்தில் விரிந்து
கிடகிறதென் கண்கள்
அவனும் நானும்
வியப்பில் காதல்
குறியீடுகளாய்
மீண்டும் மலர்ந்தோம்
நான் கண்ட கனவை
அவனும்
அனுபவித்திருப்பான்
உள்மனம் சொல்லியது
உண்மை அதுவே
நான் அவளென்று
மறந்தேன்
நான் நானாகவே
இருந்தேன்
இருவரும்
புணர்ந்து விட்டோம்
கனவல்லாத
ஒர் நிஜத்தில்
சிலந்தியின் வலையில்
சிக்கி மூலையில்
முடங்கியிருக்கும்
விரிக்கப்படாத
பாய்கள் எங்கள்
விளையாட்டை
எட்டிப்பார்த்து
பொறாமையில்
வாயடைத்து
எரிச்சலில்
ஊமையாகி
கருப்புச் சாயம்
பூசிக்கொள்கிறது
முகத்திலும்
மனத்திலும்
காமம் கூடாது காதலில்
எனும் புகுத்தப்பட்ட கற்பிதங்களால்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment