வணக்கம் சொல்லிவிட்டு
அடுத்த நகர்வை
முன்வைக்கிறது
ஒரு சக்கரம்
அதன் சுழற்சிக்கு
அப்பால் சுழலாத
உலகத்தை
சூழ்ச்சி என்பார்கள்
சுட்டெரிக்கும்
சூரியனையும் சேர்த்து
எதன் மீதும் பாரத்தை
ஏற்றி சுவடுகளாக்காமல்
பாறைகளுக்கு
பஞ்சுமெத்தையாகிறது
அச்சக்கரம்
போகப் போக
முடிவற்ற
ஒரு பாதையில்
மூச்சிரைக்க ஓடி
முன்னேறியதில்
முகத்தில் பொலிவிழந்து
முந்தைய பயண
வரலாற்றை
அசைபோகிறது
அப்போதும்
அசைந்தாடிய படியே
நிரந்தர பொழுதென்று
எதுவுமற்று
எண்ணம் மட்டும்
மணல்வெளியில்
உழல உச்சத்தின்
பெருவிளக்காய்
வெகுண்டெழும்
கானல் நீரில்
பார்வையற்ற தடுமாற்றம்
சக்கரம் காலத்தை
சர்க்கரையாக்கி
சுவைக்கிறது
பார்க்காத
பள்ளங்களில்லை
பார்க்காத
மேடுகளில்லை
சந்தித்திடாத
வலிகளில்லை
கடக்காத தூரமில்லை
தேயாத
அச்சாணிகளுமில்லை
அனைத்தையும்
அதிவேகமாய்
முன்னோக்கி பாய்ந்ததில்
பின்னோக்கி
தள்ளிவிட்டு
தக்கவைத்துக்
கொள்கிறது
தன்வரலாற்று இருப்பை
பொக்கிஷம்தான்
பரப்பளவில்
மறுமலர்ச்சி கண்ட
பெருமை மிகு
சக்கரம் பொக்கிஷம்தான்
ஆனால் அதுவொன்றும்
பெருமைபேசவில்லை
தானொரு
வட்ட நிலவென்று
அதுவே ஆதி
வரலாற்றில்
அசைக்கமுடியாத
நம்பிக்கை சக்கரமாக
இன்னும்
சுற்றிக்கொண்டே
சூரியனை துணைக்கு
அழைக்கிறது
விளையாடும்
பருவத்தில் இன்னமும்
சக்கரம்,,,
Friday, December 18, 2015
Sunday, December 06, 2015
அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்
இன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை
பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .
அண்ணல் அம்பேத்கர் அவர்கள்,,,
*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.
*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.
*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்
முறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.
*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.
*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,
தாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.
*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி "The problem of the rupee-It's
orgin and it's solution."என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய
ரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.
*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.
*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.
*இந்துசட்ட மசோதா,பிற்படுத்தபட்டவர்களுக்குஇட ஒதுக்கீடு போன்றவற்றை
நிறைவேற்ற நேரு அரசாங்கம் ஒத்துழைக்காத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா
செய்தார்.பின்னர் நேரு அரசு இந்து சட்ட மசோதாவை மட்டும் நிறைவேற்றியது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 40 ஆண்டுகளுக்கு பிறகு வி.பி
சிங் அரசு நிறைவேற்றியது.
*The Buddha and his Dhamma(புத்தமும் தம்மமும்) என்ற நூலை எழுத 10
ஆண்டுகளில் சுமார் 1டன் புத்தகங்கள் ஆராய்ச்சி செய்தார்.
*கொலம்பியா பல்கலை கழகத்தில் Waiting for a visa என்ற பெயரில் அண்ணலின்
வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
*The Annihilation of cast என்ற தலைசிறந்த புத்தகத்தை எழுதியர்.
(இந்தியாவில் சாதிகள்-உருவாக்கம் ,இயக்கும் முறை என்ற அவரது ஆய்வு
கட்டுரை அடிப்படையாக கொண்டது).
*உலகத்திலே அதிக சிலைகள் இருப்பது அண்ணலுக்கு மட்டுமே.
*மகாத்மா என காந்தியை அழைக்காமல் வெறுமனே "காந்தி" என்றே அழைப்பார்
அம்பேத்கர்.
பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .
அண்ணல் அம்பேத்கர் அவர்கள்,,,
*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.
*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.
*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்
முறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.
*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.
*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,
தாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.
*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி "The problem of the rupee-It's
orgin and it's solution."என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய
ரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.
*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.
*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.
*இந்துசட்ட மசோதா,பிற்படுத்தபட்டவர்களுக்குஇட ஒதுக்கீடு போன்றவற்றை
நிறைவேற்ற நேரு அரசாங்கம் ஒத்துழைக்காத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா
செய்தார்.பின்னர் நேரு அரசு இந்து சட்ட மசோதாவை மட்டும் நிறைவேற்றியது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 40 ஆண்டுகளுக்கு பிறகு வி.பி
சிங் அரசு நிறைவேற்றியது.
*The Buddha and his Dhamma(புத்தமும் தம்மமும்) என்ற நூலை எழுத 10
ஆண்டுகளில் சுமார் 1டன் புத்தகங்கள் ஆராய்ச்சி செய்தார்.
*கொலம்பியா பல்கலை கழகத்தில் Waiting for a visa என்ற பெயரில் அண்ணலின்
வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
*The Annihilation of cast என்ற தலைசிறந்த புத்தகத்தை எழுதியர்.
(இந்தியாவில் சாதிகள்-உருவாக்கம் ,இயக்கும் முறை என்ற அவரது ஆய்வு
கட்டுரை அடிப்படையாக கொண்டது).
*உலகத்திலே அதிக சிலைகள் இருப்பது அண்ணலுக்கு மட்டுமே.
*மகாத்மா என காந்தியை அழைக்காமல் வெறுமனே "காந்தி" என்றே அழைப்பார்
அம்பேத்கர்.
Subscribe to:
Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக ...
