இன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை
பற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .
அண்ணல் அம்பேத்கர் அவர்கள்,,,
*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.
*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.
*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்
முறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.
*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.
*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,
தாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.
*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி "The problem of the rupee-It's
orgin and it's solution."என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய
ரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.
*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.
*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.
*இந்துசட்ட மசோதா,பிற்படுத்தபட்டவர்களுக்குஇட ஒதுக்கீடு போன்றவற்றை
நிறைவேற்ற நேரு அரசாங்கம் ஒத்துழைக்காத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா
செய்தார்.பின்னர் நேரு அரசு இந்து சட்ட மசோதாவை மட்டும் நிறைவேற்றியது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு 40 ஆண்டுகளுக்கு பிறகு வி.பி
சிங் அரசு நிறைவேற்றியது.
*The Buddha and his Dhamma(புத்தமும் தம்மமும்) என்ற நூலை எழுத 10
ஆண்டுகளில் சுமார் 1டன் புத்தகங்கள் ஆராய்ச்சி செய்தார்.
*கொலம்பியா பல்கலை கழகத்தில் Waiting for a visa என்ற பெயரில் அண்ணலின்
வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
*The Annihilation of cast என்ற தலைசிறந்த புத்தகத்தை எழுதியர்.
(இந்தியாவில் சாதிகள்-உருவாக்கம் ,இயக்கும் முறை என்ற அவரது ஆய்வு
கட்டுரை அடிப்படையாக கொண்டது).
*உலகத்திலே அதிக சிலைகள் இருப்பது அண்ணலுக்கு மட்டுமே.
*மகாத்மா என காந்தியை அழைக்காமல் வெறுமனே "காந்தி" என்றே அழைப்பார்
அம்பேத்கர்.
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

https://anbanavargal.blogspot.com/2018/03/blog-post_30.html?showComment=1551167847130#c1747581646225038679
ReplyDelete