உலகம் இயங்குதல்
வேண்டுமெனில்
யோனிகள்
திறந்தே வைத்திருக்க
வேண்டுமாம்
கட்டளை பிறப்பித்தும்
கட்டுகளை இழுத்தும்
இறுக்கியும்
ஏகபோகமாய்
புணர்ந்தனுபவிக்கும்
ஆணென்ற
அரசப் பெருமகனார்கள்
அப்படித்தான்
கற்பிதம்
உரைக்கிறார்கள்
உலகிற்கு
கற்பெனும்
வலையத்திற்குள்
அரளிவிதையரைத்து
பூசியபடியே
பூலான் தேவையை
புணர்ந்தவர்களின்
விரைத்த குறியெனும்
உறுப்புகள்
கயர்லாஞ்சியை
சுற்றிவளைத்து
மணிப்பூரில் எல்லை
விரித்து
டெல்லியை
தலைமையாக்கி
சிவகாசி சிறுமியிடம்
மொத்தமாய்
இறக்குகிறார்கள்
ஆட்சியமைத்து
அத்தனையும்
அதிகாரத்தால்
அழுக்கடைந்த
விந்தணுக்களாய்
ஈழத்தில்
இசைப்பிரியாக்களின்
கிழிக்கப்பட்ட
யோனிகளையும்
அறுக்கப்பட்ட
முலைகளையும்
அவிழ்க்கப்பட்ட
ஆடைகளையும்
தூக்கி எறியப்பட்ட
கருவில்
குழந்தைகளையும்
புதைக்கப்பட்ட
பிணங்களையும்
ரசித்து புசித்து
விடுகின்றன
இந்த விரைத்த
ஆண்குறியெனும்
உறுப்புகள்
இன்னும் தூக்கி
இன்னும் தூக்கி
தீராத தன்
புணர்தல் பசியை
போவோர்
வருவோரிடத்தில்
எல்லாம்
பிரயோகப்படுத்தி
யோனியில் கசிந்து
தொடைகளில்
வழிந்தோடும்
குருதியெடுத்து
ஏடுகளிலும்
எழுதி வைக்கிறார்கள்
தன் பரம்பரை
பெருமையென
அதிலொரு
நகல் சிதைக்கப்பட்ட
உடம்பிலும்
ஒட்டப்பட்டது
இவள்
தீட்டுடையவளென்று
ஆத்திரம் கொள்ளாதீர்
ஆணை பழிக்காதீரென்று
ஆய்வுகளும்
அழுகின்றன
விநாடிக்கு ஐந்து
யோனிகள் ஆணால்
அழிக்கப்படுகிறதெனும்
அதிர்ச்சித்
தகவலைக்கேட்டு
புளித்துபோன
பாலென்று
புறந்தள்ளிவிட்டு
எழுச்சி பெறுகின்றதாம்
அடுத்த புணர்தலுக்காக
விரைத்த
ஆண்குறியெனும்
உறுப்புகள்
அடங்காத
காமவெறியானது
குழந்தையையும்
புணர்ந்து விட்டு
எங்கோ வீசுகிறது
வீசிய இடம்
சாக்டையிலா
குப்பையிலா
நீர்தேக்கத்திலா
நிலத்தின் அடியிலா
கருப்புப் புகையிலா
தேடும் வழக்குகள்
இன்னும்
தேடிக்கொண்டுதான்
இருக்கிறது
முகத்தினில்
(ஆண்)டவனின்
குறி!களை
முத்திரையாக
குத்திக்கொண்டு,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment