அறிவு
பெட்டகத்தினுள்
மதுவை
பூட்டிவைத்தேன்
குடித்துவிட்டு
மீதியை
அறிவை குடித்துவிட்டு
மது ஆட்சி
செய்கிறது என்னை,,,
எங்கே முறையிடுவது?
நீதி கேட்டு
அறிவுசார் புத்தகங்கள்
புழுங்கி தவிக்கின்றன
புழுதியில்
கிடந்த என்னை
புழுக்கள் தின்னத்
தயாராகின,,,
தன் பங்கிற்கு
கரையான்களும்
புத்தகங்களை
நோக்கி
படையெடுப்பில்,,,
என் எலும்பு
மிச்சமிருக்கிறது
புத்தகங்களின்
அட்டைகளும்
மிச்சமிருக்கிறது
அடையாளச் சான்றுகள்
போதும்தானே!
டாஸ்மாக் வாசலில்
நீதியும் மதுபாட்டிலேந்தி
வரிசையில்
அரசின் முகத்தில்
ஏக சந்தோஷங்கள்
எதற்கும் உதவாதாம்
என் சாட்சியும்
புத்தக சாட்சியும்
மன சாட்சியும்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

அருமை
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete