என் பாதங்களை
நோகடிக்க
பாதையெங்கும்
முட்களை தூவு
மலரின் மணத்தை
மனதிற்குள்
பூட்டிவை
பக்கத்தில் சிரிக்கும்
தோழி மலரிடம்
உன்னை மட்டுமே
பிடிக்குமென
பொய்யுரை
பார்த்துகூட
பேசாதே
புதர்களில்
பதுங்கிவிடு
நீண்ட நேரம்
ரசிக்க இதழ்களில்
ரசமில்லையென
கிண்டலடி
காம்பிற்குள்
சுடுநீரேற்று
இலைகளை
தொட்டு
நசுக்கி தூரே எறி
சுரக்கும் தேனில்
விஷமேற்று
மனசெல்லாம்
வலிக்க வலிக்க
காதல் செய்ய
மட்டுமே
தெரிந்த எனக்கு
வலியும் கூட சுகமே
மிச்ச விதைகளையும்
தருகிறேன்
எங்கேனும்
நட்டுவிடு
என் வேரழுத்தி
வலிகளை மட்டும்
வாங்கிக்கொள்
இப்போதைக்கு மட்டும்
முடியவில்லை
என்னால்
மேலோங்கி வளரவும்
பூத்துக் குலுங்கவும்
நம் காதலை
சுமக்கவும்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக ...

No comments:
Post a Comment