Thursday, March 17, 2016

வலியும் கூட சுகமே,

என் பாதங்களை
நோகடிக்க
பாதையெங்கும்
முட்களை தூவு

மலரின் மணத்தை
மனதிற்குள்
பூட்டிவை

பக்கத்தில் சிரிக்கும்
தோழி மலரிடம்
உன்னை மட்டுமே
பிடிக்குமென
பொய்யுரை

பார்த்துகூட
பேசாதே
புதர்களில்
பதுங்கிவிடு

நீண்ட நேரம்
ரசிக்க இதழ்களில்
ரசமில்லையென
கிண்டலடி

காம்பிற்குள்
சுடுநீரேற்று

இலைகளை
தொட்டு
நசுக்கி தூரே எறி

சுரக்கும் தேனில்
விஷமேற்று

மனசெல்லாம்
வலிக்க வலிக்க
காதல் செய்ய
மட்டுமே
தெரிந்த எனக்கு
வலியும் கூட சுகமே

மிச்ச விதைகளையும்
தருகிறேன்
எங்கேனும்
நட்டுவிடு

என் வேரழுத்தி
வலிகளை மட்டும்
வாங்கிக்கொள்
இப்போதைக்கு மட்டும்

முடியவில்லை
என்னால்
மேலோங்கி வளரவும்
பூத்துக் குலுங்கவும்
நம் காதலை
சுமக்கவும்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...