Tuesday, March 22, 2016

தேசியப் பஞ்சாலை கழகத்தில் கோடிக்கணக்கில் ஊழல்

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான தேசியமயமாக்கப்பட்ட என்டிசி பஞ்சாலைகளில்
கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த மோசடியில்
ஈடுபட்ட அதிகாரிகள் மீது தேசிய ஊழல் கண்காணிப்பு குழு விசாரணை மேற்கொண்டு
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்த சி.ஐ.டி.யு கோவை மாவட்டப் பஞ்சாலை தொழிலாளர் சங்க
அலுவலகத்தில் சிஐடியு மாவட்டத் தலைவரும் பஞ்சாலை சங்கப்
பொதுச்செயலாளருமான சி.பத்மநாபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது
அவர் கூறுகையில்,
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்பட்ட கோவை மாவட்டத்தில் 1966,
67 ஆம் ஆண்டுகளில் 27 பஞ்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டது­. இதில்
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில்
ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஒருபகுதி
பஞ்சாலைகள் இழுத்து மூடப்பட்டது. மற்றொரு பகுதி பஞ்சாலைகள் அதிகாரிகளின்
சுயநலத்தால் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் முறைகேட்டினால் தொடர்ந்து
நலிவடைந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கோவையில் இயங்கும் ரங்கவிலாஸ் பஞ்சாலையில் ஒரு
கோடியே 75 லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பது அம்பலமாகி உள்ளது.
இதில் குறிப்பாகக் கழிவுப்பஞ்சு விற்பதில் ஏறத்தாழ ஐம்பது லட்சம் மோசடி
நடைபெற்றுள்ளதாகவும்,­ அதேபோலப் பேக்கிங் வேலைகளுக்கு ஒரே பெயர் உள்ள
இரண்டு நபர்களுக்குத் தனித்தனியாக 10 லட்சம் ரூபாய் காசோலைகள்
வழங்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாகவும்,­ கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக
இந்த மோசடி தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான புகாரின்
அடிப்படையில் தற்போது அலுவலகத் தற்காலிகப் பணியாளர் நந்தகோபால் மீது
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவு­ம், மேலும், கண்காணிப்பாளர்
தமிழ்ச்செல்வன், கணக்கு அதிகாரி இராமகிருஷ்ணன் ஆகியோர் இடைநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். இதேபோல அலுவலர் வடிவேல், காசாளர் நாகராஜ் ஆகியோர்
மீது போலிஸ் விசாரணை, மற்றும், ஆலைமேலாளர் கார்த்திகேயன் இடைநீக்கம்
செய்யப்பட்டுள்ளார். மேலும், ரங்கவிலாஸ் பஞ்சாலையின் பொதுமேலாளர் சந்திர
மௌலி சஸ்பென்ஸ் செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றும்
எந்தத் தகவலும் வெளியே வராமல் அதிகாரிகள் மட்டத்திலேயே விசாரணை கமிசன்
அமைத்து விசாரித்து வருகிறார்கள். நடைபெற்ற ஊழல் முறைகேடு என்பது
மேலதிகாரிகளின் துணை இல்லாமல் நடைபெற்று இருப்பதற்கான வாய்ப்பில்லை எனச்
சி.ஐ.டி.யு. கருதுகிறது. ஆகவே தென்மண்டல அதிகாரிகள் இந்த ஊழல் குறித்த
விசாரணையை மேற்கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. மேலும், பல ஆண்டுகள்
இதுபோன்ற முறைகேடுகள் செய்துவருவதும் அம்பலமாகி உள்ளது என்றும், இது
குறித்த புகார் அளித்தால் புகாரைப் பெருவது திட்டமிட்டுக்
காலதாமதப்படுத்துவதாக­வும் சி.பத்மநாபன் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வந்த 27 பஞ்சாலைகளில் நஷ்டம் ஏற்பட்டு
இருபது பஞ்சாலைகள் மூடப்பட்டுத் தற்போது ஏழு பஞ்சாலைகள் மட்டும் இயங்கி
வருகிற நிலையில், மேலும், இதுபோன்ற நஷ்டக் கணக்கு காட்டி இருக்கும்
பஞ்சாலைகளும் மூடப்பட்டால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை
இழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார். மத்திய ஊழல் கண்காணிப்புக்குழு
இதனை விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 24 ஆம் தேதி
அனைத்து ஆலைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மற்றத்
தொழிற்சங்கங்களோடு இணைந்து பேசி வேலை நிறுத்தம் உள்ளிட் நடவடிக்கைகளில்
ஈடுபட உள்ளதாகச் சி.பத்மநாபன் தெரிவித்தார். இந்தப் பத்திரிக்கையாளர்
சந்திப்பில் சி.ஐ.டி.யு கோவை மாவட்ட பஞ்சாலை சங்க தொழிலாளர் சங்க மாவட்ட
தலைவர் மனோகரன், பொருளாளர் இராமமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-தீக்கதிர்

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...