நான் சிலுவையை சுமக்கின்றபோது எழும் பூமியதிரும் சிரிப்புகளை உற்று கவனிக்கவும் செவி மடுக்கவும் அப்போதெனக்கு தோன்றவில்லை அது தேவைகள் பூர்த்தியான தெனாவட்டு சிரிப்புகளென சிந்தையில் முன்பே சுருக்கென குத்தி விட இலக்கு ஒன்றேதான் இப்போதெனக்கு ஆறுதல் அதுவே பாதி வழியை கடந்த பின்னர் என்னுள் நானே என் நரம்புகளினூடே எழும்பும் உரத்த முழக்கங்களால் சிலுவையே உடைபடும் நிலைகொள்ள முதல் கேள்வி எழுகிறது என்னுள் எங்கே நான் சிலுவையை இறக்கி வைப்பது? சற்றும் பதிலுக்கு காத்திருக்கவில்லை எனை அடிமையாக நடத்தும் அதே ஆதிக்கத்தின் தோளில்தான் இறக்கிவைக்கிறேன் விழும் அடிகளைத் தாங்கி திருப்பி அடிக்காமல் விடுதலை பிறக்காது என் தோழா!
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...
இது வரிகளா?வலிகளா?
ReplyDeleteஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருக்கும் வலிகளை வரிகளாக்கினேன்
ReplyDelete