ஒரு சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பிலேயே பெரும் ஆதிக்கத் திணிப்பை சக
மனிதர்களிடத்தில் அதையும் தாண்டி குறிப்பாக பெண்களிடத்தில் மிகச்
சாதாரணமாக பிரயோகப்படுத்தும் பிற்போக்குத்தனமான சாதியவாதமும் மதவாதமும்
இருக்கின்ற வரையில் இந்தியம் சமத்துவ பாதையை நோக்கிப் பயணிக்க வாய்ப்பே
இல்லாத போது அந்த சக மனிதர்களான ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்திய
மக்களின் வாழ்வென்பது காலங்காலமாக நசுக்கப்படுவதே வழக்கமாக
குடியமர்த்தப்படுகிறது. ஒரு தலித்திய சமூகத்தில் அநீதிகள்
நிகழ்த்தப்படுகிறபோது அதனை எதிர்த்து வெகுண்டெழும் ஆதிக்கர்களை கண்ணால்
பார்ப்பதே கடினம், அப்படியானவர்கள் இல்லையென்றே எடுத்தாளலாம் ஏனெனில்
அவ்வகையானவர்கள் என்றுமே ஆதிக்கத்தின் பிடியில்தானே தன்னை நிலைநிறுத்திக்
கொண்டிருக்கிறார்கள் . ஆகவேதான் இந்த கேடுகெட்ட இந்துத்துவ பார்ப்பானிய
ஆதிக்கச் சாதிவெறியர்களின் மிகக்கொடுமையான அடக்குமுறை கோரச்சம்பவங்கள்
நிகழ்த்தப்படுகின்றபோது அதற்கான எதிர்ப்பலைகளையும்,
பாதிக்கப்பட்டோர்களுக்கான ஆறுதல் மொழிகளையும், அன்பு , கருணை
காட்டுவதிலும் அதே ஆதிக்கச் சாதிவெறியர்களால் பாதிப்படைந்த இன்னொரு
தலித்தியம் தோள்கொடுக்கிறது. தம்மைப்போலவே வலியாலும், வேதனையாலும்
துடிக்கும் தாய்க்கு இன்னொரு தாய் ஆறுதல் கூறுகின்றாள். ஆம்!
அண்மையில் ஆணாதிக்க சாதிவெறியர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு மிகக்
கொடூரமாக கொலை செய்யப்பட்ட கேரள சட்டக் கல்லூரி மாணவி (தலித்) ஜிஷாவின்
தாய் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் ஐதராபாத் பல்கலை
சாதிவெறியாட்டத்தாலும்,அரசப் பயங்கரவாத கல்வி நிர்வாகத்தாலும் கொலை
செய்யப்பட்ட (தலித்) ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா.
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...
No comments:
Post a Comment