அமைதிப்
பெருவெளியில்
அடங்காமல்
சுற்றிச் சுழலும்
தென்றல் காற்றுக்கு
நான் அடிமை
சீற்றமில்லை
புழுதிகள்
கொஞ்சமுமில்லை
வெண்ணிற ஆடையால்
சலித்தெடுத்து
வடித்தாலும்
உட்புகுந்து
வெளியேறுகையில்
உள்ளத் தூய்மையை
திறந்து காட்டி விட்டு
செல்கிறது எந்தன்
தென்றல் காற்று
மூக்குடைந்து போன
முகங்களுக்கு
வேண்டுமானால்
காற்று வெறும்
நாற்றமாகலாம்
யாருமறியா
சாமத்தில் அடர்த்தியான
அந்த பூவனத்தில்
பூத்துக் குலுங்கும்
மலர்களின் மணத்தை
கவர்ந்து
தன்னை
ரசிகிறவர்களின்
மனங்களை கவரும்
வர்ணஜால
வித்தைகளை தனக்குள்
இருத்தியிருக்கும்
தென்றல் காற்றுடனே
திகட்டாத
வேட்கைதனில்
மூழ்கியிருக்கும்
எவரும்
காதலிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள்
தென்றல் காற்றை
இப்போதுதான்
நானோ
முந்திப் போகிறேன்
அவர்களுக்கு
முன்னரே காதலிக்கவும்
செய்கிறேன்
என் ஆன்மாவின்
அடுத்த வாரிசு
தென்றல் காற்றாக
இருக்க வேண்டுமென்கிற
ஒரு சின்ன
நப்பாசையோடு,,,
பெருவெளியில்
அடங்காமல்
சுற்றிச் சுழலும்
தென்றல் காற்றுக்கு
நான் அடிமை
சீற்றமில்லை
புழுதிகள்
கொஞ்சமுமில்லை
வெண்ணிற ஆடையால்
சலித்தெடுத்து
வடித்தாலும்
உட்புகுந்து
வெளியேறுகையில்
உள்ளத் தூய்மையை
திறந்து காட்டி விட்டு
செல்கிறது எந்தன்
தென்றல் காற்று
மூக்குடைந்து போன
முகங்களுக்கு
வேண்டுமானால்
காற்று வெறும்
நாற்றமாகலாம்
யாருமறியா
சாமத்தில் அடர்த்தியான
அந்த பூவனத்தில்
பூத்துக் குலுங்கும்
மலர்களின் மணத்தை
கவர்ந்து
தன்னை
ரசிகிறவர்களின்
மனங்களை கவரும்
வர்ணஜால
வித்தைகளை தனக்குள்
இருத்தியிருக்கும்
தென்றல் காற்றுடனே
திகட்டாத
வேட்கைதனில்
மூழ்கியிருக்கும்
எவரும்
காதலிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள்
தென்றல் காற்றை
இப்போதுதான்
நானோ
முந்திப் போகிறேன்
அவர்களுக்கு
முன்னரே காதலிக்கவும்
செய்கிறேன்
என் ஆன்மாவின்
அடுத்த வாரிசு
தென்றல் காற்றாக
இருக்க வேண்டுமென்கிற
ஒரு சின்ன
நப்பாசையோடு,,,
அருமை நண்பரே...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி தோழர்!
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete