Monday, July 11, 2016

என் மௌனங்கள்

என் மௌனங்கள் மென்று தின்னுகிறது வார்த்தைகளை அதற்கு பெயரிடுகிறாய் சம்மதமென்று அமைதியாய் இருந்துவிட்ட காரணத்தால் எனது ஆசாபாசங்களை தொலைத்துவிட்டு தவிக்கிறேன் எவ்வாறாயினும் காகிதமொன்றில் மௌனம் தின்று போட்ட எச்சங்களை எழுத்தாக்கி கடிதமொன்றை வரைகிறேன் எனது கைகளுக்காவது தெம்பிருக்குமா அதை உன்னிடத்தில் தருவிக்கவென்று தெரியாதெனக்கு வலிக்கத்தான் செய்கிறதென் இயலாமையும் தயக்கங்களும் இறுதியில் கோழைத்தனமாய் உன்னை மணமுடிக்கிறேன் மனதை கல்லாக்கி கசக்கத்தானே செய்யும்...

Monday, July 04, 2016

புத்தனுக்கு

அமைதியாக புத்தன் அமர்ந்திருக்கிறான் ஆசைகள் அனைத்தும் சிலைகளாக வடித்தாகிவிட்டது அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லாமல் உலகெங்குமாய் ஆனாலும் புத்தனுக்கு பேச வேண்டும் போலிருந்தது என்னை ஏன் கடவுளாக்கினீர்கள் என்று வாய்ப்பூட்டு புத்தனுக்கும் வாய்ப்புகளை சிலைகளுக்கும் தந்தாகி விட்டது நிரந்தரமாய் மௌனம் புத்தனுக்கு பொருந்திப் போனதென்று போலியாய் பரப்புரையும் செய்தாகிவிட்டது இனி பேசுதல் பற்றி சிந்தித்தல் கூட புத்தனுக்கு பக்தர்களின் அனுமதி வேண்டி வரிசையில் நின்றாக...

Sunday, July 03, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

*தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களைஉரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டம்.*2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம்,பெண்கள் என்ன பலன்கள் எல்லாம் பெற முடியும், அதற்கு விண்ணப்பிப்பதுஎப்படி, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும் என்பது பற்றிஇப்போது காண்போம்…மனுவை எப்படி எழுத வேண்டும்?*`ஆமாம்’, `இல்லை’ என்பது...

Saturday, July 02, 2016

இந்துத்துவ ஆர் எஸ் எஸ் ஓர் அறிமுகம்

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ?அவர்கள் யார்?அவர்களின் பணி என்ன?1.ஆர் எஸ் எஸ் என்பது –ராசிடிரிய சேவை சங்கம் –இது இந்து மத வெறிஎன்ற ஒன்றால் அமைக்கப்பட்டபார்பனர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்,2.இதுக்கு உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்திவரும் ஒரு பயங்கரவாத அமைப்பு இது.3,இதுதான் கோட்சே மூலம் காந்தியைசுட்டு கொன்றது. இன்று இந்தியாவில்இருக்கும் மத கலவரங்களுக்கும் , சாதிமோதல்களுக்கும் இதுதான் காரணம் ..4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள்...

கபாலியும் கொலையும்

நான் கபாலி திரைக் காவியம் பற்றியும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஓயாது மந்திரங்களோதும் பலகோணத்து புது படங்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன் இடையிடையே அரட்டையும் அங்கலாய்ப்புகளும் அடுத்த சூப்பர் ஸ்டார் தலயா தளபதியா? என்கிற ஆராய்ச்சி விவாதங்களுடனும் அந்த பயணங்களில் எனதருகில் ஒரு தற்கொலை ஒரு படுகொலை கண்டும் காணாமல் நகர்ந்து விட்டேன் உடனே விமரிசனம் எழுதியாக வேண்டுமே அதுபற்றியல்லாமல் திரைக் காவியங்களை பற்றி தல தளபதிகளை பற்றி,,, சுவா(தீ)க்களோ வினுபிரியாக்களோ...

மாவோ எனும் மாமனிதன்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியினை விரும்பும் கம்யூனிஸ பாட்டாளி வர்க்கத் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருங்கிணைத்தலை ,வழிநடத்தும் பண்பு கொண்ட ஒரு தலைமை வாய்ப்பதற்கு அவர்களின் புரட்சிக்கு ஏற்ற வெற்றிபெற்ற செயல்திட்டங்களே உதாரணமாய் அமைகின்றது. அந்த வகையில் ஓர் தலைமை மட்டுமே செயல்திட்டத்தினை தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து புரட்சியை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸியம், லெனினியத்திற்கு செழிப்பூட்டும் வகையில் பாட்டாளி வர்க்கத்தின் மீது...

Friday, July 01, 2016

மிக சமீபத்தில்

மிக சமீபத்தில்தான் நான் செத்திருக்க வேண்டும் ரிங்கார இறைச்சலோடு ஈக்கள் கூட்டமொன்று யாரோ ஒருவன் தன் கூர்வாளால் எனதுடலை கிழத்த இடங்களில் வழிந்தோடும் குருதியின் கதகதப்பில் ஆழ்ந்து உறங்குகின்றன அவைகளை தொந்தரவு செய்யாதீர்கள் விலகியோ விழுந்தடித்தோ நகர்ந்து விடுங்கள் நாளைக்கு அவைகள் மட்டுமே என் கல்லறைக்குள்ளும் அனுதாபங்களை சுமந்து கொண்டு உயிரோடு வாழும் ஆத்ம விசுவாசிகள் அப்போதவைகள் ஈக்களில்லை தன் உருவங்களை மாற்றிக்கொண்ட புழுக்களெனும் பெயரில்...

கடவுளாக்கப்பட்டவன்

நானாகி நிற்கிறேன் யாருமற்ற அடர் வனத்தில் கனத்திருக்கும் சிலுவையின் சுமையினை இறக்கி வைத்து இயேசுவை போல என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீரென கதறி அழுகிறேன் கடவுளாக்கப்பட்டவனின் கடைசி அலறலும் கதறலும் காதுகளில் விழாதென கைகளால் மூடிக்கொண்டது அந்த அடர்ந்த வனம் அதுவும் நல்லதுதான் கடவுளை மறுப்பதற்கு போதுமானதாய் பொதுவானதாய்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...