Friday, July 01, 2016

மிக சமீபத்தில்

மிக சமீபத்தில்தான்
நான் செத்திருக்க
வேண்டும்

ரிங்கார
இறைச்சலோடு
ஈக்கள் கூட்டமொன்று

யாரோ ஒருவன்
தன் கூர்வாளால்
எனதுடலை கிழத்த
இடங்களில்
வழிந்தோடும்
குருதியின்
கதகதப்பில்
ஆழ்ந்து உறங்குகின்றன

அவைகளை
தொந்தரவு
செய்யாதீர்கள்

விலகியோ
விழுந்தடித்தோ
நகர்ந்து விடுங்கள்

நாளைக்கு அவைகள்
மட்டுமே
என் கல்லறைக்குள்ளும்
அனுதாபங்களை
சுமந்து கொண்டு
உயிரோடு வாழும்
ஆத்ம விசுவாசிகள்

அப்போதவைகள்
ஈக்களில்லை
தன் உருவங்களை
மாற்றிக்கொண்ட
புழுக்களெனும்
பெயரில்,,,

4 comments:

  1. அருமையான வரிகள்
    தொடருங்கள்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  2. எனது பங்களிப்பு இருக்கும் தோழர்!

    ReplyDelete

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...