Saturday, November 10, 2018

அதீத கனவுகள்




ராட்சஷி கனவுகள் என்றதை
அழைப்பதுண்டு...
எனக்குள் எப்பொழுதும் கனவுகள்
எழுந்துகொண்டேயிருக்கும்...
அதில் தேடும் வண்ண மயில்
நீயென சிறுபொறி தட்டும்
நாழிகையில் என் நுனி நாவினை
கடித்து சட்டென தோற்றுவிப்பேன்
சின்னஞ்சிறு வெட்கத்தை...
வெள்ளை நிறத்தால் அதை பூட்டி
கறுப்பின் சாயம் கொண்டு
எனக்குள் அமிழ்த்தி
இதயச் சத்தங்களாய்
மீண்டும் வெளியிடுவேன்...
ஆமாம்...
கறுப்புதான் வெள்ளையை அடையாளங் கொள்ளும்
விழித்திருக்கும் போதெல்லாம்
தொலைத்துவிடாமல் தவறாது
நீயாக நின்ற வண்ண மயிலுக்காய்
காணுகின்றேன் எப்பொழுதும் என்
அதீத கனவுகளை...

1 comment:

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...