Wednesday, January 09, 2019

பௌத்தம் இரண்டு கேள்விகள் ?




இரண்டு கேள்விகளை முன்வைத்து  ....

ஒன்று : மணிமேகலை தவிர்த்து (அக்காலம்) ஏன் தமிழகத்தில் தற்போது ஒரு பெண் பிக்கு கூட இல்லை

இரண்டு : தலித்துகளை பௌத்தனாக மதம் மாற்றினால் அவனை ஊருக்குள் அனுமதிக்குமா இந்த சாதிவெறி சமூகம்.

முதலாவது கேள்வியில் அனேகமாக இன்னும் பௌத்தம் பரவலாக்கப்படவில்லை மேலும் இந்துத்துவம் பௌத்தத்தை பரவலாக்க விடவில்லை அதனால் பெண் பிக்குகள் உறுவெடுக்கப்படவில்லை என்று சப்பை கட்டுகள் கட்டப்படலாம்... காரணங்கள் இரண்டுமே இதற்கு பொருந்தாது... ஏனெனில்... எப்பொழுது பௌத்தம் மதமாக்கப்பட்டதோ அப்பொழுதே அது பெண்களை ஒதுக்கி வைக்கும் அதே மதவாத சக்திக்குள் வந்துவிட்டது... இந்து முஸ்லீம் கிருஸ்துவம் போல அதுவும் பெண்களை மதத்திற்குள் அனுமதிப்பதில்லை என்பதன் வெளிப்பாடுதான் பெண் பிக்குகள் தமிழகத்தில் உறுவாகவில்லை... போலவே இதோ பெண் பிக்குகள்  எடுத்துக்காட்டுகள் என தமிழகத்தை தவிர்த்த மற்ற மாநிலத்தவர்களை சுட்டிக்காட்டுவதில் இருக்கிறது அந்த மதப்பற்று சுய மதவாதம்....

இரண்டாவதான கேள்விக்கு தெளிவாகச் சொல்வதென்றால் சேரி-ஊர் என இரண்டாக பிரிந்து கிடக்கும் இரட்டைக்குடில் முறை சமூக கட்டமைப்பிலிருந்து பௌத்தம் விடுவிக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம் முதல் கேள்விக்கு சப்பைக்கட்டு கட்டுவதை கூட இதில் செய்யமுடியாது... ஏனெனில் சாதியாதிக்கம் தான் இந்துவிலிருந்து வெளியேறுவேனே தவிர சாதியத்திலிருந்து வெளியேற முடியாது என்று தீர்க்கமாக இருப்பதன் வெளிப்பாடுதான் கிருஸ்த்தவ நாடார் இன்ன பிறரும்.. முகமதிய நாடார் இன்ன பிறரும் , ஆக இங்கு தலித்துகள் பௌத்தம் திரும்பினாலும் அதே சேரியில் காலணியில்தான் வாழ வேண்டும்... இது ஒரு முக்கியமான பௌத்த மாற்றத்திற்கு பெரும் சிக்கலாக இருக்கும் என்பது பௌத்தர்களுக்கும் தெரியாமல் இல்லை, பிறகு ஏன் தலித்துகளை பௌத்தத்திற்குள் அடக்குகிறார்கள் என்பதை அவர்கள்தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.போலவே புத்தர் எங்கேயாவது என்னுடையது "மதம்" என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை , இங்கு எல்லா மதங்களும் ஏதோ ஒரு விதத்தில் மக்களை அடிமைபடுத்துவதையே தன் பணியாக கொண்டிருக்கிறது என்பது உண்மை , இதில் பௌத்தமும் விதிவிலக்கல்ல, அம்பேத்கர் இந்து பட்டத்தை துறப்பதற்காக  பௌத்தம் தழுவினார் சரி... இதே அம்பேத்கருக்கு பௌத்தம் தழுவினாலும் சேரியில்தான் அவன் வாழனும் என்பது தெரியாதா? என்கிற விமர்சனம் உண்டு... போலவே இதையே பிடியாய் பிடித்துக்கொண்டு பௌத்த மதம் மாறுங்கள் என தலித்துகளிடம் கொண்டு செல்வதை  அழுத்தமாக "திணிப்பது" என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது...

மதம் ஒரு அபின் என்கிற மார்க்ஸ் கூற்று...
மதம் மனிதனை மிருகமாக்கும் என்கிற பெரியார் கூற்று...
இவை இரண்டிற்கும் சற்று விலகியே அம்பேத்கர் இருக்கிறார்... அதாவது ஒன்றுக்கு தீர்வு மற்றொன்று என்பதாக மதத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை கோவில் நுழைவு போராட்டமே சான்றாக அமையும்... தலித்துகளை இந்து கோவில்களில் , இஸ்லாம் பெண்களை மசூதிகளில் நுழைய விடாமல் தடுக்கின்ற போது அதற்கு மாற்று நீ கோவிலுக்கே செல்லக்கூடாது என்றால் அது மாற்றுத் தீர்வு அல்ல , தொட்டால் தீட்டென்றால் தொடாமல் விடாதே... என மும்முனை எதிர்ப்பு என்பது தீர்வாகும்... அதே போல ஒரு மதம் மனிதனை விலக்கி வைக்கிறதென்றால் அதற்கு மாற்று இன்னொரு மதம் அல்ல , அந்த மதத்திற்குள்னான எல்லா தீட்டும் , புனிதங்களையும் பொது வெளியில் போட்டுடைத்து மதமற்றவன் மனிதன் என்பதை உணர்த்துவது தீர்வு... எந்த மனிதனும் பிறக்கும் போது சாதியோடு , மதத்தோடு பிறப்பதில்லை அவன்சார்ந்த சமூக கட்டமைப்பில் இருந்து மதங்களால் சாதிகளால் திணிக்கப்பட்டே அவன் இன்ன மதம் , இன்ன சாதி என அடையாளப்படுத்தப்படுகிறது.... எல்லா மதங்களிலும், பௌத்தம் உட்பட அனைத்திலும் தீட்டும் புனிதமும் ஒன்றோடொன்று பிணைந்தே இருக்கிறது ‌... அதுதான் மதம்... முதலில் தீட்டும் புனிதத்தையும் கிழித்து எறிந்துவிட்டு எந்த மதம் வருகின்றதோ அந்த மதத்தை எல்லோரும் ஏற்கலாம்... ஆனால் தீட்டும் புனிதத்தையும் கிழித்து எறிந்தால் " மதம் " மண்ணாகிவிடும் என்று அதே பௌத்தம் உட்பட எல்லா மதங்களுக்கும் நன்றாகவே தெரியும்...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...