பெரும் பசியில் தன் பிச்சை பாத்திரத்தை துழாவி துழாவி தேடுகையில் ஒரு ரொட்டித்துண்டு விழுந்தது கார்ப்பரேட் , ஆளும் அரசு
கரங்களிலிருந்து ...
வீழ்ந்து கிடந்த ராத்திரியில்
அழுகி கிடக்கும் மரத்திடம்
தேடி அலையும் தன் வீடு அழித்த பகைவனை தோண்டி அமிழ்த்தி பிடித்து
நீதி கேட்க எத்தனிக்கும் பொழுது
வெளியேறும் கார்ப்பரேட் மூளையை பசிக்க தின்று
பழி தீர்க்க துடித்திடும் வேளையில் மீண்டும் மீண்டும் வந்து சத்தம்போடுகிறது என் வீடு இடிக்க துடிக்கும் இயந்திர நகங்கள்
இன்னமும் ...
நகரங்களில் வாழ விடாது துரத்திக்கொண்டே கல்லறையை தோண்டி எடுத்தும் கார்ப்பரேட் கட்டிடங்கள் வந்து முளைக்கிறது
கால் தோய்ந்த பூர்வ நிலங்களை
அரசும் அழிச்சாட்டியம் செய்கிறது
காற்று கூட சுவாசித்தலை குறுக்கிட்டு தலித்துகள் இவர்களென விரட்டும் போல ...
(சென்னை புளியந்தோப்பு , கோவை உக்கடம் தலித்துகள் குடிசைகள் இடிக்கும் அரசை குறித்து )
0 comments:
Post a Comment