Friday, March 22, 2019

ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...




இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில் நிலவும் எல்லா மதங்களையும் பகுத்தறிவின்பால் தீவிரமாக எதிர்க்கும் தன்மையை (குறிப்பாக இந்து மத சாதிய அடுக்குமுறைகளை) பெரியார் இங்கு நிறுவியிருக்கிறார் . நானே கூறினாலும் கேட்டறிந்து பகுத்துப்பார்த்து அதன்பின் பின்தொடர்ந்திடு ... என்று இதுவரை யாரும் பெரியாரை போல உரைத்தவரில்லை , பெரும்பான்மையாக நிலவும் சாதிய சமூகத்தில் அதனோடு கூடவே சம்பிரதாயங்கள் , மூடப்பழக்க  வழக்கங்கள் , மத சடங்குகள் , சாதிய சடங்குகள் என எல்லாவற்றையும் பகுத்தறிவின்பால் "அழித்தொழித்தல்" என்பதே ஈரோட்டு கிழவனின் செயல்முறையாக இருந்தது , மதங்கள் எவையெல்லாம் தீட்டு, புனிதம்  என்கிற இரண்டு வரைடறைக்குள் மக்களிடம் திணிக்கிறதோ அவற்றையெல்லாம் வெறும் வெங்காயம் என நசுக்கி "கல்வி" தான் உனது ஆகச்சிறந்த ஆயுதம் என அறச்சீற்றத்தோடு பெரியார் உரைத்தார் . இன்றும் இந்துத்துவ சக்திகள் மட்டுமல்லாது ஏனைய மதங்களும் உள்ளிழுக்க முடியாத பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களை வெறும் கறப்பு நிற அடையாளங்களுக்குள் அடக்ககவிட விட முடியாது , பெரியாரின் பகுத்தறிவு சித்தாங்கள் நீலம் , கறுப்பு , சிவப்பு என்கிற சமத்துவ சுயமரியாதை நிறங்கள் மூன்றிலும் பயணிக்கக் கூடியது .
தன்னை எதிர்த்து கேள்வி கேட்கப்பட்டால் உடனே அவர்களை சமூக விரோதி , தேச விரோதி , மதத்திற்கு எதிரானவர்கள் , சாதியத்திற்கு எதிரானவர்கள் , அமெரிக்க கைக்கூலி , பாகிஸ்தான் உளவாளி என அடுக்கடுக்காக இன்றளவும் பழிகளை சுமத்தி அவர்கள் போன்றவர்களை வேட்டையாடத் துடித்து , கொன்றும் அழித்துக் கொண்டிருக்கும் சாதிய மதவாத சக்திகளிடமிருந்து , அவ்வாறு எதிர்த்து கேள்வி கேட்பர்களை பாதுகாக்கும் அரணாக பெரியாரிய சித்தாந்தங்கள் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது ... எதையும் பகுத்தறிவின் கீழ் கொண்டுவந்து அதிலிருக்கும் தீட்டை , புனிதத்தை உடைத்தெறிய ஓர் ஆயுதம் எதுவென்றால் அது ஈரோட்டு கிழவன் பெரியார் மட்டுமே என்பது தமிழகம் இன்று வரையிலும்  பார்த்துக்கொண்டுதானிருக்கிறது . பெரியார் கலகக்காரன் தான் ...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...