Sunday, April 28, 2019

பேரன்பு பெருங்காதல் ...

நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக துளிர்விட செய்கிறவள்(ன்) நீ ... சொட்டும் நீரிதழ் ததும்பும் முத்த ஏக்கங்களை குழைத்து என் மேல் பூசும் வாஞ்சையுடன் உதித்துவிடும் " இச் " சப்தங்களின் ஊடே நீரிதழை ஆழ் மனதிற்குள் ஒளித்து வைக்கிறாய் ... நீ என்னை நேசிப்பதும் நானுன்னை நேசிப்பதும் தயக்கமின்றி இலகுவாக அடையாளங் கண்டு நயத்தோடு நெளியும் அழகியலின் ஊற்றாக...

Wednesday, April 17, 2019

நிர்வாணம்

அர்த்தமற்ற வார்த்தைகளாகும் வாழ்வின் பெருங் கூச்சலிடையே உனக்கு நானும் எனக்கு நீயும் ஆறுதல் மொழிகளினூடே ஆழ்மனதில் தேக்கி வைக்கிறோம் இப்பெருங் காதலை ... ஊடறுக்கும் இவ்வேளையில் நிர்வாணம் பூசி கண்ணீரில் கலந்திருக்கும் உப்பு நீரால் ஆழியில் மிதந்திருப்போம் ....

Sunday, April 14, 2019

சலனமற்ற கதவுகள் ...

சிதைந்து விழும் சிறு சிறு கனவுகளின் வழியே மணல் திட்டுகளில் அடுக்கி வைத்து காத்திருக்கும் நீள் சாமத்தில் சிதலமடைந்த ஓர் இறப்பின் அழுகையில் கொட்டித்தீர்த்திடும் கண்ணீர் பெருவெளி வழியாகவும் அலசி , ஆராய்ந்து பார்க்கிறேன் ... சிறு சிறு கனவுகளை கோர்த்து சேகரித்து மடியில் கட்டி திரியும் சிலுவைகளிடம் மடிந்து கிடக்கும் இப் பெருங்கனவை தின்றவர்கள் யாரென ... ஞானம் கொண்டேன் தினம் நான் சந்திக்கும் மனிதர்கள் அவர்களென அடித்துச் சொன்னது யாருமற்ற அறையில் சலனமற்ற...

Wednesday, April 10, 2019

பிதற்றல்

அவதியுற்ற வலிகளில்புண் போன்றுஒட்டிக் கிடக்கும்வார்த்தைகளை மட்டுமேகோர்த்து ...கொன்றழித்த பிறகேனும் விடாமல்வதை செய்திடும்  அரை சான் வயிற்று பசிதனில்படிந்து கிடக்கிறது பாசிசங்களின் சூழ்ச்சிகள் ...பசிக்கு தண்ணீர் தீர்த்தமென ஒவ்வொரு இரவாக கடந்து போகின்ற பொழுதுகளில்பார்வையில் விழும் யாவும் பற்றியெறிந்து வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாகி விழுகிறது உணவுக்காக ஏங்கும் கரங்களில் ...அவர்களை  போலமாடி வீட்டு பால்கனியில் மிதந்துபசியாற உண்டு விலையுயர்ந்தபளிங்கு...

Monday, April 08, 2019

கருநீலசிவப்பு

ஒரு அறைதலில் வெளிபடும்வீரயத்தில் சிவந்திடும்கன்னங்களில்பதிந்துவிட்ட அச்சுகளில்இன்னும் ஒட்டியிருக்கிறதுதொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை ...காய்ச்சி எடுத்த வெப்பச் சலனத்தில் எங்கும் புண்கள் முளைத்து வடுவென மாறிப்போனஅந்த தொழிலாளிகளின் கரங்களில் தங்கியிருக்கும் வலிகளில்தான்அதிர்வுகளை காண்கிறது அதிகார வர்க்கம் ...நிறங்களின் கிளைகளில்படிந்துவிட்ட கரைகளைசனநாயக சக்தி கொண்டுமீண்டும் துளிர்விட துடிக்கிறதுஎல்லோர் கைகளிலும் பூட்டப்பட்டுகிடக்கும்  அடிமை...

Tuesday, April 02, 2019

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019PDF வடிவில்-Download link ...

Monday, April 01, 2019

பரிதவிப்புகள் ...

பறக்கவோ பரிதவிப்புகளைவிட்டுச் செல்லவோ இயலாதஒரு சிறு மரங்கொத்தி பறவைஉடுத்திவிட்டு போன மரக்கிளையிலிருந்துமெல்ல எட்டிப் பார்க்கும்அப்பாவி விதைகளின்  தலைகளின்உச்சியில் கூர் ஆணிசெலுத்தப்படுகிறதுஇந்த வாழ்வு எந்த தயக்கமுமின்றிகுருதி வெளியேற்றத்துடனே தன் குடியிருந்த மரப் பொந்தின் உள்ளேயேசாவின் அடக்கமும் செய்தாகிவிட்டது ...இனி நீதிகேட்டு அவைகள்வாய்திறக்கப்  போவதில்லைவாயடைத்திட்டு மென்மேலும்நிதி பற்றாக்குறை என வேண்டுமானால் நீதிகள் மிரட்டல் விடுக்கலாம்...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...