அவதியுற்ற வலிகளில்
புண் போன்று
ஒட்டிக் கிடக்கும்
வார்த்தைகளை மட்டுமே
கோர்த்து ...
கொன்றழித்த பிறகேனும் விடாமல்
வதை செய்திடும் அரை சான் வயிற்று பசிதனில்
படிந்து கிடக்கிறது பாசிசங்களின் சூழ்ச்சிகள் ...
பசிக்கு தண்ணீர் தீர்த்தமென ஒவ்வொரு இரவாக கடந்து போகின்ற பொழுதுகளில்
பார்வையில் விழும் யாவும் பற்றியெறிந்து வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாகி விழுகிறது உணவுக்காக ஏங்கும் கரங்களில் ...
அவர்களை போல
மாடி வீட்டு பால்கனியில் மிதந்து
பசியாற உண்டு விலையுயர்ந்த
பளிங்கு பேனாவால்
ஐஐஐ ... நிலா நிலா !!!
எனவெழுத ஆசைதான் ...
என்ன செய்ய ...
சாதியென்றும் மதமென்றும்
ஊறிப்போன சமூத்தில் ஆண்டாண்டுகால அடிமையிவன்(ள்) ...
பிதற்றல் வார்த்தைகளை கோர்த்து மூக்கு சிந்தும்
பேனாவால் முள்ளாய்
தேய்கிறேன் ...
விடிந்தால் கொஞ்சம் அசைத்தாவது பாருங்கள் எனதுடலை
பசியின் கொடுமையில்
அன்றுகூட செத்திருக்கிலாம்
நான் ...
0 comments:
Post a Comment