Sunday, April 28, 2019

பேரன்பு பெருங்காதல் ...




நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக துளிர்விட செய்கிறவள்(ன்)
நீ ...

சொட்டும் நீரிதழ் ததும்பும்
முத்த ஏக்கங்களை குழைத்து
என் மேல் பூசும் வாஞ்சையுடன்
உதித்துவிடும் " இச் "
சப்தங்களின் ஊடே
நீரிதழை ஆழ் மனதிற்குள் ஒளித்து வைக்கிறாய் ...

நீ என்னை நேசிப்பதும்
நானுன்னை நேசிப்பதும் தயக்கமின்றி இலகுவாக அடையாளங் கண்டு நயத்தோடு நெளியும் அழகியலின் ஊற்றாக கட்டிப்பிடித்து
கொண்டும் உரசிக்கொண்டும்
உள்ளம் நனைய ஒரு யுகம் கடந்து நீளும் கடற்கரையோர நுரை ததும்பலில் குழைத்து செதுக்கி காதலென்கிறோம் ...

வாழ்வு புசிக்கும் நரைமுடி கண்டு தளர்ந்த நிலையில்
முதிர் பருவ தவிப்புகள்
நமக்கில்லை ...

கடந்து வந்த பாதைகளின் நினைவுகளினூடே
என் கரம் பற்றி நீயும்
உன் கரம் பற்றி நானும்
மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்கிறோம் ...

எப்பொழும் அசாத்தியமானது
பேரன்பென பிதற்றுபவர்களை
ஆகாயத்தை காட்டி
மிதந்து வரும் மேகங்களில் நம் முகங்களை காட்சி படுத்துகிறோம் ...

வாழ்தலும் பேரன்பின்பால்
என விளங்கிக்கொள்ளும்
எல்லா திசைகளிலும்
நாம் உயிர்வாழ்கிறோம்
என் பேரன்பு கொண்ட ராட்சஷியே ...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...