Wednesday, May 01, 2019

தொழிலாளர் தினம் இந்தியாவில் ...



                   உலகத் தொழிலாளர்களே
                    ஒன்று சேருங்கள் - மாவோ

முதலாளித்துவ வர்க்கம் , தொழிலாளர் வர்க்கம் என இரு வர்க்கங்களின் மூலம் சாதிய மனோநிலையில் இங்கு கொட்டிக்கிடக்கிறது , பெரு முதலாளியர்களின் சுரண்டல்கள் பொருளாதார ரீதியிலான ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் ஹிந்துத்துவ சாதியத்தினுள் சுழன்றுக்கொண்டே இருக்கும் . முதலாளித்துவத்திற்குள் ஏற்படும் மோதல்களும் இவ்வகையில்தான் கட்டமைக்கப்படுகிறது , சாதியப் படிநிலையில் தனக்கு கீழான‌ஒருவன்  தனக்கு நிகராக முதலாளிய பலம் பெறுவதை அதே முதலாளித்துவ வர்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை , அதேபோல
தொழிலாளர் வர்க்கம் தனக்கு கீழான சாதிய படிநிலை கொண்ட சக தொழிலாளர்களை நசுக்குவது அல்லது அடிமைபடுத்துவதிலேயே குறியாக இருக்கும் வேளையில் இங்க தொழிலாளர் ஒற்றுமை சிதைக்கப்படுகிறது . இந்தியாவை பொறுத்த வரையில் இரண்டு வர்க்கங்கள் என்பதை தாண்டி மூன்றாம் வர்க்கமாக "சாதிய முரண்" இடம்பெறுவதை    சோஷியலிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டு கொள்வதில்லை என்பதே எதார்த்த நிலை .
ஒரு சமூகம் தன் அடிமை நிலையிலிருந்து மீண்டெழுந்து சோஷியலிஸத்தை விரும்பதாக  தன் நிலையிலிருந்து அது மீண்டெழ முதலில் சாதிய வர்க்கம் பேதங்களிலிருந்து மீண்டெழ வேண்டும் . இந்த நிலையிலிருந்து பார்த்தோமானால் ,
 இந்தியாவில் எந்தவொரு தொழிற்சங்கங்கமும் அதன் பின்னணியில் இயக்கப் பொருளாக இருப்பது சாதிய படிநிலை கொண்ட தொழிற்சங்கங்களாகவே காணப்படுகிறது . போலவே அதன் அடுத்த நிலையிலிருந்து ஆணாதிக்கம் என்கிற பதத்திலும் வந்து ஒட்டிக் கொள்கிறது .  சோஷியலிஸ கம்யூனிஸ்ட் எப்பொழுதும் பெண்ணடிமை தளத்தை உடைத்தெறிந்து விடுதலில் தனக்கான ஓரிடத்தை கொண்டிருக்கிறது என்பது வரலாறு , பெண் சுதந்திரம் , பெண்களுக்கு சம உரிமை , பெண்களுக்கு வாக்குரிமை , ஆணாதிக்க எதிர்ப்பு என எல்லா தளங்களிலும் கம்யூனிஸ சித்தாந்தங்கள் இல்லாமல் பேசிவிட முடியாது , ஆனால் இன்றளவும் நீளும் பெண்ணடிமைத்தனம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு பெருந்தடையாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை . எனவே இந்த மே 1 தொழிலாளர் தினத்தில் சாதிய மனோபாவத்திலிருந்தும் , ஆணாதிக்க மனோபாவத்திலிருந்தும் தொழிலாளர் வர்க்கம் விடுதலை பெற்று ஒரு முழுமையான சோஷியலிஸ , சமத்துவ தொழிலாளர் வர்க்கம் உருவாகி முதலாளித்துவ எதிர்ப்புக் களத்தை உறுவாக்கிட நாம் அனைவரும் "தோழன் " என்கிற முறையில் சக மனிதர்களாக களம் அமைத்திட வேண்டும் .
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக ...
மேதின வாழ்த்துகள் ...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...