Saturday, June 29, 2019

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது மோடியே ...



ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை குறித்து ஏற்கனவே திருமுருகன் காந்தி அவர்கள் எச்சரித்ததுதான் ... அடிப்படையில் பாஜகவின் எல்லா திட்டங்களும் மேல்குடி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து அதையும் அவர்கள் ஆஹா ஓஹோ என வரவேற்பார்கள் , கிட்டத்தட்ட எல்லா படிநிலைகளிலும் மோடியின் திட்டங்களை அப்படித்தான் இங்கு பரவலாக்கப்படுகிறது , மக்களையும் பழக்கப்படுத்த வைத்துவிடுகிறார்கள் , தனக்கென ஓர் ரசிக பட்டாளம் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஏழை எளிய மக்களை சுரண்டுவதுதான் மோடிக்களின் அரசியல் உளவியல் , இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு பார்ப்பன அஜென்டாவை திணிக்கும் பிற்போக்குகளை கடந்து வந்திருப்போம் , ஜோடி குரூஸ் , ஜெமோ , மாலன் , பானு கோம்ஸ் , சாரு , என இதன் பட்டியல்கள் நீளும் ... போலவே மாநில அடிமை அரசும்  மோடிக்களின் காவி மயமாதலை எவ்வாறு அமல்படுத்துகிறார்கள் என்பதை நாமும் கண்கூடாக பார்த்துக்கொண்டு வருகிறோம் , அரசு பள்ளிக்கு துரோணன் பெயர் , பாரதிக்கு காவி முண்டாசு (பாரதியே காவிதான் என்றாலும் அடையாளப்படுத்துதல் எதற்கு? ) வகுப்பறை மேசைகளில் காவி நிறம் அடிப்பது , பாட புத்தகங்களில் காவியை திணிப்பது , என அடுக்கடுக்குகளாய் சொல்லிக்கொண்டே போகலாம் ... இப்போது ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பதை எடுத்துக்கொண்டோமானால் அது முழுக்க முழுக்க மாநில சுயாட்சிக்கு எதிரானது , கிட்டத்தட்ட இந்தி மொழியை ஒரே தேசம் ஒரே மொழியென இவர்கள் மாற்றத் துணிந்ததிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம் , ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் என்ன பொருள் வழங்கலாம் , அதன் விலை நிர்ணயம் , விநியோகத்தின் தன்மை , பொருட்களின் தரம் , என்பன எல்லாவற்றையும் இனி கார்ப்பரேட்டுகளே தீர்மாணிக்கும் , ஏற்கனவே ரேஷன் கடைகளில்  எவனோ எந்த போலி நிறுவனமோ  மட்டமாக  தயாரிக்கும் உதிரி பொருட்களை வாங்கினால்தான் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்கிற கார்ப்பரேட் மூளை வியாபார யுக்தி இங்கு எப்போதோ வந்துவிட்டது , மிகவும் மலிவான தரம் கொண்ட சோப்பு , தேங்காய் எண்ணெய் , டீதூள் , என அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த தகுதியற்றதாகவே தூக்கி வீசப்படுகிறது , ஆனால் அதனை ரேஷன் கடைகளில் விற்கும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடைகிறது , இது இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எந்தளவுக்கு கொள்ளையடிக்க போகிறது என்பதை  தயவுசெய்து ஏழை எளிய மக்கள் உணர வேண்டும் .

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...