Friday, January 24, 2020

ஸ்பரிசம்




உனக்குள் இருக்கும் உன்னை
எதன் மீதும் பற்றுதல் இன்றி
எனக்குள் இருக்கும் என்னிடம்
சிறகடித்து பறத்தல் நிமித்தம் போல
பெரு வாழ்வு வாழ்ந்துவிட்டதாக
சிலாகித்து சினுங்கும்
பேரன்பு பூசிக்கொண்டலையும்
நின் மௌன முகத் தோற்றத்தை
என் நெஞ்சம் முழுதும் பூசிக்கொள்கிறேன்

தெரியுமா !!!

ஒரு பட்டாம்பூச்சி
என் தேகம் முழுக்க
வந்து வந்து அமரும்போது
மெல்லிய சிலிர்த்தல்
நிகழ்ந்த அதே பேருணர்வு
நீ என் நெஞ்சத்தில் சாய்ந்திடுகையில்
சில்லிட்டு உணர்கிறேன்

பெருங்காதலை இத்துணை வேகமாக
உனக்குள்ளும் எனக்குள்ளும்
ரசாயன கலவை செய்தது
எதுவோ?...

2 comments:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...