Sunday, July 19, 2020

ஓர் 1000 பார்வையிலே


மின்னல் பொழுதில் விழிகளை சுழற்றி சட்டென மறையும்
உன் கண்ணிமைதனில் எனை கண்டுவிட்டேன் ...

போதும் ...  என நினைக்காத மனதிலெழும் பரிதவிப்புகளினூடே
வேண்டும் வேண்டும்
மீண்டும் மீண்டும் என்றே 
நின் பார்வையில் நான் சிறகு முளைத்து பறந்துவிட
துடிக்கிறேன் ....

சாரளமோ , கதவிடுக்கோ
மதில் சுவரோ , மாடியோ
 வண்ணங்கள் இல்லா  சித்திரம் என
வாடி உருகும் பனித்துளிபோல
நீயற்ற இரவுகளை கடக்கிறேன் ...

பூக்களின் மகரந்தம் 
மென் காற்றில் மிதந்து மிதந்து
புதியதாய் மண்ணில்
துளிர்விடும் அழகினை கண்டு
துள்ளல் எழ ... 

உனக்குள் நானும் துளிர் விடவே
தினம் நீ பார்க்கும்
ஓராயிரம் பார்வையிலே 
ஒவ்வொன்றாய் காற்றில் மிதக்க விடுகிறேன் ....

3 comments:

  1. very nice. Best wishes to grow more.

    I have posted my kavithai's as video at https://bit.ly/3iDmvYU
    Please check and provide your comments.

    Thank

    ReplyDelete
  2. நன்றியும் , மகிழ்ச்சியும்...

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...