Wednesday, March 23, 2016

"பேபி" கையால் ரொட்டி வேண்டும் - பகத்சிங்

"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள்.
"பேபி" கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார்.
காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர். ஆனால் பகத்சிங், 'அவர்
தான் ரொட்டி செய்து தர வேண்டும் என உறுதியாய் கூற, பேபி அழைத்து
வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர், ரொட்டி செய்து தர மாட்டேன்", எனக்
கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில்
சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால்,
ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர் என்று
சொன்னார் பகத்சிங். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது லாலா
லஜபதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான பிரிட்டிஷ் காவலதிகாரியைச்
சுட்டுக் கொன்ற காரணத்துக்காகவும், பாராளுமன்ற வெடிகுண்டு
தாக்குதலுக்காகவும், பொய்வழக்கான கொள்ளை, திருட்டு என வெள்ளை ஆட்சி
புனைந்த வழக்குகளால் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று பேரும்
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் 1931, மார்ச் 23-ஆம் தேதி
தூக்கிலிடப்பட்டனர். இதில் பாராளுமன்ற வெடிகுண்டு தாக்குதலை இன்குலாப்
ஜின்தாபாத் முழக்கத்தோடும் ,தார்மீக பொறுப்போடும் ஏற்றுக்கொண்டு
குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். போலவே தூக்கிலிடும் முன்பு இறுதியாக அவரது
நெருங்கிய உறவினர் ஒருவர் மூலமாக "மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து
விடு 23 வயதிலேயே சாகவேண்டுமா, இனி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள அரசு
உத்திரவாதம் அளித்துள்ளது" என்று சொல்லவைத்தது வெள்ளைக்கார அரசு
அதற்கு பகத்சிங் ஒரு பார்வையத் தான் பதிலாகத் தந்தார். அந்தப் பார்வையின்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு. இன்று (23.3.2016) அம்மூவரின் நினைவு நாள்.

அப்படியே அந்தமானுக்குப் பயணமாவோம்,,,

சிறைவார்டன் பொதுவாக ஒரு அறிக்கை ஒன்றை சிறையில்
பொதுமண்டபத்தில்ஒட்டுகிறார், அதில் ":இனிமேல் சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபடமாட்டேன், மனப்பூர்வமான மன்னிப்புக் கடிதம் எழுதி எனது
குடும்பத்தார் ஒரு சாட்சிக்கடிதத்துடன் வழங்குகிறேன் என்று
எழுதித்தரவேண்டும், அப்படித் தந்தவர்களுக்கு உடனடியாக சிறையிலிருந்து
விடுதலை செய்ய பிரிட்டீஷ் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று அந்த
அறிக்கையில் உள்ளது,
460 சிறைக்கைதிகளில்வெறும் 7 பேர் மட்டுமே எழுதிக்கொடுத்து அந்தமான்
சிறையிலிருந்து விடுதலையானார்கள். அதில் சாவர்கரும் (RSS) ஒருவர். "பாரத் மாதா
கி ஜெய்" என்பதற்கும்
"இன்குலாப் ஜின்தாபாத்"
என்பதற்குமான புரிதலை இனி அவரவர் பார்வைக்கே விட்டுவிடுதல் நல்லது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...