நானும் நீயும் பேசுகையில் இடையில் சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...
குழந்தையானது
சிந்தாமல் சிதறாமல் உணவருந்தாது நாமறிவோம்...
குழந்தையின் பிஞ்சு உதடுகளில் ஒட்டியிருக்கும் கடைசி பருக்கையினை தன் முந்தானையால் துடைத்து விடும் தாயின் சுத்தம் தான் நம் சிந்திய வார்த்தைகளின் துடைத்தெறிதல் ...
எல்லாம் கடந்த பின்னாலும் ஒரு பின்னிரவில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஓர் குரல் ...
அது நீ விட்டுச்சென்றதும் நான் தேடாமல் விட்டதுமான வார்த்தைகளின் குரலாக கூட இருக்கலாம் ...
எது எப்படியோ....
பசியாறிய குழந்தை தாய்மடி தஞ்சம் புகுவது போல ... உன் மடியில் நானும் என் மடியில் நீயும்
மிச்சமிருக்கும் பேசிய வார்த்தைகளினூடே
தஞ்சமாகிறோம் ....
0 comments:
Post a Comment