Sunday, March 22, 2015

மாட்டிறைச்சியும் மனித மனங்களும்

இங்கே மகாராஷ்ட்ர மாட்டிறைச்சித் தடை குறித்து எழுதப்போவதில்லை அது
குறித்து பல்வேறு பதிவர்கள் மாட்டிறைச்சி தடையினை ஆதரித்தும் எதிர்த்தும்
பதிவிட்டிருக்கிறார் . ஒவ்வொரு மனங்களும் ஒரே மாதிரியான சிந்தனையில்
இருப்பதில்லை அதனால் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதுவதில் எதை அதிகப்படியான
வருகையாளர்கள் வாசிக்கத்தொடங்குகிறா­ர்களோ அதுவே சமூகமாற்றத்திற்கான வழி
. இன்றைய தினத்தின் தகவலின் படி மாட்டிறைச்சி தடைக்கெதிகராக பொதுநல
வழக்குகளும் போடப்பட்டுள்ளது என்பதை தெரியபடுத்தியிருக்கி­றார்கள்
விரைவில் ஏதேனும் தீர்வு எட்டப்படுமோ அல்லது வெட்டப்படுமோ சட்டமியற்றிய
மகாராஷ்ட்ர மாநில அரசிடமே விட்டுவிட்டு வந்து விடலாம் .
"எனக்கு மாட்டிறைச்சி மிக பிடிக்கும் வாரத்தில் ஒரு நாளேனும் மகிழ்சியாக
சமைத்து சாப்பிட்டு விடுவேன்"
பொறுங்கள் இன்னும் சில நொடிகளில் மனித மனங்கள் பேசத்தொடங்கும்,
மேற்குறிப்பிட்ட விருப்பத்தகவலை கண்டதும் விரைவாக உங்களின் மூளை
செயல்பட்டு "இவன் இன்னகுலம்,இன்னகோத்தி­ரம், இன்னசாதி, இன்னபிரிவென்று
உடனே வகுத்து பல கணக்குகள் மனதில் போட்டு உடனே தீர்வை எட்டிவிடுகிறது
பார்த்தீர்களா, இது தான் மனித மனங்களின் எண்ணச்சிதறல் எனப்படுகிறது.
உலகிலேயே உணவில் சாதியம் பார்க்கும் நாடு இந்தியாவாகத்தான்
இருக்கமுடியும் . அந்தளவிற்கு மனித மனங்களில் சாதியத்தை பரப்பி
விட்டிருக்கிறது அதே மனிதர்களை கொண்டச் சமூகம் . மனிதர்கள் மீது எவ்விதத்
தவறுமில்லை அதைச் செய், இதைச்செய்யாதே, அவனை அடிமைபடுத்து அவனுக்கு
மேலாதான் நீயிருக்கிறாய் என போதிக்கும் சமயக் குருமார்களின் சூழ்சியில்
சிக்கிய மனிதர்கள் மீது நாமெப்படி பழி போட்டுவிட்டு தப்பித்து
விடமுடியும். கற்பித்தவன் நெறியுடன் கற்பித்தால் உணவிலெப்படி சாதியம்
தெரியும் .உணவில் அசைவம்,சைவம் எனும் பதம் முந்தைய காலங்களில்
இல்லையென்பது நாமறிந்ததே அது பழங்காலம் மனிதன் கிடைத்ததை உண்டு எங்கோ
தூங்கி வாழ்ந்த காலம் அதைப்பற்றி பேசுதல் பழங்கால புனைவாகிவிடும் இடையில்
மனித நாகரிகம் தலையெடுக்க முற்படுகையில் கூட சைவம் அசைவமென எழுந்ததில்லை
வேத உபநிடத நூல்களின் அடிப்படையில் பார்ப்பனர்களும் அசைவப் பிரியர்களே
என்கிறது அப்பேத்கரின் நூல் . அசுவமேத யாகங்களின் மூலமாக குதிரைகளை ஆளும்
அரசர்களால் பலியிடப்பட்டு படையல் உணவாக்கப்பட்டது என்கிறார்கள் ,
பிற்காலத்தில் எப்படி அசைவ உணவான மாட்டிறைச்சி ஒரு குறிப்பிட்ட தலித்தின
ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே உணவாக கொண்டிருக்கும் பார்வை ஏற்பட்டதென்பதை
பார்ப்பனர்கள் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் . பௌத்தம் இந்தியாவில்
தலைத்தோங்கிய காலக்கட்டத்தில்தான் இந்துத்துவத்தை மீட்டெடுத்து மீண்டும்
வளர்ச்சியடையும் நோக்கங்களின் காரணமாக பார்ப்பனர்கள் சைவ உணவு பழக்கத்தை
மேற்கொண்டனர் இதறக்கு அன்றைய காலக்கட்ட பக்தி இயக்கங்கள் பெரும்பரப்புரை
செய்திருந்தார்கள். அப்படியானச் சூழலில் பசு வதையினை பக்தி இயக்கங்கள்
கையிலெடுக்கிறார்கள் . ஏற்கனவே பசுக்கள் தெய்வங்களாக ஆக்கப்பட்டு
பசுக்களை கொள்ளுதலும் உணவாகப்படுதலையும் அன்றைய பக்தி இயக்கங்கள்
கடுமையாக விமர்சித்து தடைசெய்ய நாடெங்கும் புறப்பட்டார்கள் . பசுக்கள்
மிக சொற்பமாகவே இருந்தமையாலும் இதனால் பால் உற்பத்தி பின்னடைவைச்
சந்தித்ததெனும் அன்றைய வரலாறுகள் குறிப்பிடுகிறது. அவ்வாறான இந்தியச்
சூழலில் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்ட ஒடுக்கப்பட்ட அல்லது பின்தங்கிய
மக்களுக்கு பசுவதை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதற்காக
அவர்களுக்கு ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு அவர்களுக்கான உணவையும்
தடைசெய்திருந்தது பக்தி இயக்கங்கள் . (இதனை எழுத்தாளர் ஜெயமோகன் பக்தி
இயக்கங்களை குறிப்பிடாமல் மேலோட்டமாக ஒரு வாசகர் எழுதிய கடிதத்திற்கு
பதிலுரை அளித்திருப்பார்) இவ்வாறானச் சூழலில் பசுக்களின் இறைச்சியை
வேறுவழியின்றி தலித்தின ஒடுக்கப்பட்ட மக்கள் உணவாக மேற்கொண்டனர்.
பிறகு 19ம் நூற்றாண்டுகளில் திணிக்கப்பட்ட மாட்டிறைச்சி உணவுக்கு
தடைகோரிய இந்து இயக்கங்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன . இந்திய
அரசமைப்புச் சட்டத்தில் "பசு வதை"குறித்து குறிப்பிடப்பட வேண்டுமென
அன்றைய காங்ரஸ் அரசானது அம்பேத்கருக்கு நெருக்கடி
கொடுத்தது.வேறுவழியின்றி அம்பேத்கரும் அரசமைப்புச் சட்டத்தில் பசுவதை
குறித்த ஷரத்துகளை சேர்த்தார் . இந்நிகழ்வின் அடிப்படையிலான அம்பேத்கர்
கூறுகையில் "நான் சில நேரங்களில் என் மனசாட்சியை கொன்றுவிட்டுத்தான்
அரசமைப்பு சட்டத்தை உறுவாக்கினேன் என்னை சுதந்திரமாக செயல்படுத்த எந்த
அரசுகளும் விட்டதில்லை" என்கிறார் . ஒரு குறிப்பிட தலித்தின மக்கள்
மட்டுமே மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்கிற பிம்பம் தற்போது உடையத்தான்
செய்கிறது. தமிழ்நாட்டில் பொருத்தவரையில் கோழி, ஆடு ,போன்ற இறைச்சிகளின்
விலையை விட மாட்டிறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வருமானமற்று
வாழ்வாதாரமில்லா தலித்தின மக்கள் மட்டுமே மாட்டிறைச்சி உண்கிறார்கள்
எனக்கொண்டால் எப்படி அந்த ஒரு இனத்திற்காக அதிக விலையில் மாட்டிறைச்சி
விற்கப்பட முடியும். இது பொருளாதார "தேவைவிதி"க்கு சவால்விடுவதாகத்தானே
இருக்கிறது.
அசைவப் பிரியர்களும் மாட்டிறைச்சி உண்போரை மிகக் கேவலாமாக பார்க்கும்
மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள். ஏதோ வேற்றுகிரக வாசியைப்போலத்தான்
அம்மனிதர்களின் மீதான பார்வை இவர்களுக்கு இருக்கிறது. இம்மாதிரியான
கேவலச் சிந்தனையில் விடுபட்டு உணவில் சாதியத்தை புகுத்தும்
பொதுபுத்தியிலிருந்து­ தங்களை விடுவித்துக்கொண்டு பிறகு எந்தவிதமான
சட்டங்களையும் நீங்கள் இயற்றிக்கொள்ளுங்கள் அதைவிடுத்து இன்னமும்
பார்ப்பனர்களின் சாதியப் பார்வையில் அகப்பட்டு நீங்களே அடிமையாக
இருந்துக்கொண்டு உங்களுக்கு கீழே ஓர் அடிமைச்சமூகம் இருப்பதாக போலி
கர்வம் கொண்டு மென்மேலும் அடக்குமுறைகளை கையாள்வதென்பது மனித
நாகரீகத்திலிருந்து விடுபட்டு மீண்டும் பழங்கால மனித மிருகங்களாக
மாறிக்கொள்ளாமல் மனிதனை மனிதனே மதிக்கும் உன்னதத்தன்மைக்கு உயிர்கொடுக்க
தயாராகிவிடுங்கள்.

3 comments:

  1. I ridicule your caste based perspective on this matter. There are larger scientific based benefits in growing and letting the cow live. One example is even the cow sung is natural antiseptic. It's milk is unparalleled for nutrients.
    Where is the relevance for upper caste and lower caste here. By letting cows live, environment will improve and even lower caste will benefit too

    ReplyDelete
    Replies
    1. Anonymous22/3/15

      Why every people saying that "larger scientific based benefits in growing and letting the cow live." . If so, even there will be larger scientific benefits if we stop drinking milk .

      And I am laughing here because you also accepted that you are taking this as caste perspective.. you know why ? read your last sentence (environment will improve and even lower caste will benefit too ) , why you said 'EVEN lower caste' :P

      Delete
    2. That phrase was used to be in line with author language. Also the term lower caste doesn't meant bad caste. The term is used for understanding

      Delete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...