Wednesday, March 25, 2015

ஹைக்கூ "அவளே வரைகிறாள்"

நிழலில்
இலைச்
சருகுகள்
நிர்வாண
கோலத்தில்
மரம்
____

அஞ்சும்
கரும்புனல்
எங்கே
வடித்தோம்
சிற்பத்தை
தேடுகிறது
மரங்கொத்தி
____

அவளை
அவளே
வரைகிறாள்
வாசலில்
கோலமாக
____

சிசுக்கள்
சுவாசிக்குமுன்
வெடித்து
விட்டன
வன்முறைகள்
___

பேருந்துக்கு காத்திருக்கவில்லை நடைபாதை
எறும்புகள்
___


கருப்பு ரோஜாவே நிகரானவளும் மனமொடிந்ததால் முதிர்கன்னி
ஆனாயோ
___

அதிகாரத்தோடு
கேட்கிறான்
பிச்சைக்காரன்
வரதட்சணையை

___*___

1 comment:

  1. நிழலில்
    இலைச்
    சருகுகள்
    நிர்வாண
    கோலத்தில்
    மரம்
    நன்று!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...