Tuesday, June 16, 2015

லலித் மோ(ச)டி , நரேந்திர மோ(ச)டி நடுவில் சுஷ்மா

லலித் மோ(ச)டி , நரேந்திர மோ(ச)டி இரண்டு பேருக்கும் எந்தவொரு
வித்தியாசமும் இருந்ததில்லை இதில் சுஷ்மா துண்டுச் சீட்டுபோல செயல்பட்டு
லலித் மோடிக்கு விசா வழங்கியிருக்கிறார் அவ்வளவே ,, கண்ணுக்கெட்டிய
தூரத்தில் குதூகலத்தோடு குற்றவாளியொருவன் திரிகிறானென்றால் அதுயெப்படி
"தலைமறைவு" ஆகிவிடும் தேடப்படுவதில் தேவையற்ற அரசியல் இருப்பது நமக்கு
புலனாகிறதல்லவா, எதன் அடிப்படையில் விசா வழங்குனீர்கள் எனக்கேள்வி
எழுப்பினால் "நம்பிக்கை" அடிப்படையில் என்கிறார் சுஷ்மா . நம்பிக்கை
நட்சத்திரம் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுகிறார் . ஆக
ஊழலுக்கெதிரான ஆட்சி என்பதை பிஜெபியால் தரவே முடியாது என்பது
ஓராண்டிற்குள்ளாகவே தெரிந்து விடுகிறது. இதைத்தானே காலங்காலமாக
எதிர்க்கின்றோம் . அப்போதெல்லாம் எங்களுக்கு
"தீவிரவாதி,மதவெறி,கல­கக்காரன்" என்றெல்லாம் பட்டம் சூட்டி பாசிஸத்திற்கு
பெரும்பான்மை அளித்த நல்லுங்களுக்கு "ஆழ்ந்த நன்றி! சொல்வதைத் தவிர
வேறெதுவும் தோன்றவில்லை, சமீபத்தில் மோடியின் ஓராண்டு சாதனைக்கு தனி
புத்தகமே அச்சிட்டு வெளியிட்டது மாலைமலர் . ஊடகத்தில் செயல்படும்
கார்ப்பரேட்டுகளுக்கு­ ஓராண்டு காலமாய் மோடி கொடுக்கும் தைரியத்தில் ஆர்
எஸ் எஸ் அமல்படுத்தும் இந்துத்துவ வெறிகொண்டு
பேச்சுகளும்,எழுத்துக­ளும்,அறிக்கைகளும் தெரிந்தே மறைக்கப்பட்டதில்
வியப்பேதும் எழவில்லை, வேண்டுமானால் அப்பட்டியலில் இன்னொன்று
கூடியிருக்கிறது அதுவே லலித் மோடியின் விசா வழங்கள் விவகாரமென்று
மீண்டும் பிஜெபிக்கு எதிரான விவாதங்களை அதே வீரியத்தோடு நாங்களும்
முன்வைக்கிறோம். என்ன செய்ய முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாதையை
நாங்கள் தேர்ந்தெடுத்து விட்டோமே ,,,ஊழல்,உழைப்புச் சுரண்டல், சமூக
நீதிக்கெதிராக செயல்படுதல், இன்னும் சமூகத்தை சீரழிக்கும் எதுவெல்லாம்
இருக்கின்றனவோ அதுவாகவே ஊறிப்போன ஒரு சர்வாதிகார அரசிடமிடமிருந்து சமூக
நல்லிணக்கம் தேடுவதென்பது "நீரில் எழுதுவதற்குச் சமம்" வேறுவழியில்லை
மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காகவே மோடியை தேர்ந்தெடுத்தோம் என்கிறது
சமூகம், மாற்று அரசியலே வேண்டாம் இரு தேசிய கட்சிகளும் குருதி குடிக்கும்
கட்சிகளாகவே இருக்கிறது. ஆகவே வேண்டும் எங்களுக்கு மீண்டுமொரு சுதந்திர
போராட்டமென்று சூளுரைக்கும் தைரியத்தை இழந்த கையாலாகத நொண்டிச்சாக்குதான்
இத்த "மாற்று அரசியல் மோகம்" ஒன்றைத் தெளிவாக இச்சமூகம் புரிந்து கொண்டு
செயல்பட வேண்டும்
" எந்தவொரு சரித்திரத்திலும் சர்வாதிகாரம் நிலைத்து நின்றதுமில்லை அது
வெற்றிவாகை சூடியதுமில்லை" இதனை உணர்ந்தாலே எளிதில் ஊழலற்ற இந்திய நாட்டை
இச்சமூகம் எளிதாய் கைப்பற்றிவிடும். சூழ்ச்சமம் இதிலிருப்பதனால்தான்
ஆட்சியாளர்கள் சமூகத்தை சிந்திக்க விடாமல் செய்கிறார்கள். உடைத்தெறிவது
நமது கடமையாக இருக்கிறது.கிட்டத்தட்ட உலக பணக்கார வர்க்கத்தின் அனைத்து
செயல்பாடுகளையும் உள்ளிழுத்துக்கொண்டு உழைப்பைச் சுரண்டும் பணியில் என்றோ
தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவிட்டது "இந்தியம்" மாற்றம் வேண்டி மாற்று
அரசியலை தேடுவதற்குப் பதில் மாசற்ற மனிதர்களை இச்சமூகம் தேட வேண்டும்.
அதற்கு முதலில் தங்களைத் தாங்களே தயார்படுத்திக்கொண்டு­ "அரசியல் ஒரு
சாக்கடை" என்று கற்பிதம் செய்யாமல் , "அரசியல் ஒரு சரித்திரம்" என்று
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில் கற்பிக்கப்பட இச்சமூகம் முன்வர
வேண்டும்.சட்டமும்,சம­ூகமும் தானாக வளைவது இல்லை சமூக மக்களே முதலில்
அதனை வளைத்து விடுகிறார்கள். சீர்திருத்தம் சமூக மக்களிடமே எழ
வேண்டுமேயன்றி யாரேனுமொரு பிரதிநிதியை தேடியலைதவதனால்தான் லலித்
மோ(ச)டிகளும் நரேந்திர மோ(ச)டிகளும் இங்கே உறுவாகிக்
கொண்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...