Wednesday, June 17, 2015

பிரபஞ்சத்தின் காதலியவள்

தனிமையை தேடிப்போகிறாள்
அவள்

பூக்களை
மேய்ந்து விட்டு இன்பத்தேனை சுவைத்துண்டதும்
கண்டும் காணாமல்
உதறித் தள்ளிடும் வண்டுகளாய்
மேய்ந்த ஆண்மக்கள் விலைமகளென்று பெயரிட்டார்கள்
அவளுக்கு

நிர்வாண கோலத்தில் நிழலிருந்தாலும்
அனல் பார்வை வீச்சால்
அடைய துடிக்கிறார்கள் அவளின் அந்தரங்க
உடல் பாகத்தை

பார்வைகள் பலவிதமாய் ஒவ்வொன்றும்
புதுவிதமாய் பட்டுத்தெறித்தன

ரசனைகளின் வெளிப்பாடு
பிடித்த பகுதிகளை அவர்களே
தேர்வு செய்கிறார்கள் அவர்களே மதிப்பீடும் போடுகிறார்கள்
போகப் பொருளாகத்
தெரிகிறாளவள் ஆண்மக்களுக்கு

பேசிய பேரப்பணம்
வந்து சேரவில்லையாம் தரகனை திட்டிவிட்டு தரதரவென
அவளை இழுத்து
தாகம் தீரும்வரை புணர்ந்துவிட்டு கடைசியில் கைவிலங்கிட்டான் காவல்காரன்

வழக்கு வழுக்கி விழந்தது வாயிற்படியில்
அவளைப்போலே
எத்தனையோ
பெண்கள் வரிசையில்
அவளும் ஒரு
எண்ணிக்கை சேர்க்கையில்

நிச்சயமாய் அவள்
ஆடை அணிந்திருக்கிறாள் சாட்சிக் கூண்டில்
உடல் நிற்கிறது

நீதி தேவதையின்
கண்களோடு
காதுகளையும் சேர்த்திங்கேதான் கட்டியிருக்கிறார்களே

கடைசியாக நோட்டமிடுகிறாளவள்
சாட்சியம் கேட்கும் நீதிபதியை

அப்பப்பா!!!
ஒரே வியப்போடு பேரதிர்ச்சியும்
அவளுக்கு

என்னை விட
அதிகமாக நீதிதேவதைதான் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருப்பாள்
உண்மைகளை
உணர்ந்த பொழுதில்
தரகர் கட்டினான்
அபராதப் பணத்தை

இனி கூடுதலாய் புணர்தலுக்கு
நேரமொதிக்கியாக வேண்டுமவள்

கிடைக்கும் இடைவெளிகளில் இயற்கையை
ரசித்துவிட
தனிமையை தேடிப்போகிறாள்
அவள்

மனதிலெழும் இன்பத்தின் பிம்பத்தை எப்போதும் தூரத்திப் பிடிக்கத் துடிக்கும்
பிரபஞ்சத்தின் காதலியவள்
கடைசிவரை
காட்சிப் பொருளாகவே
இருக்கிறாள்

மனசாட்சிகள் பல
அவளுக்குப் பின்னால்
இன்னமும்
சிரித்துக் கொண்டே தானிருக்கிறது,,,

2 comments:

  1. உணர்வுப்பூர்வமான அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...