உயிரை
வாங்கும்
கவிதைக்கு
உனது பெயரையே
சூட்டுகிறேன்
இம்சைகள்
மிக பிடிக்கும்
என்பதால்,,,
___
இளங்கதிர்
உதயம்
என்னவளின்
கழுத்தில்
___
கசியும்
மௌனம்
உள்ளே
தோய்ந்த
இதயம்
___
அவளின்
நினைவுகளில்
மிச்சமிருப்பது
என் காதல்
மட்டுமே,,,
___
நீலம்
கரைதொடும் முன்பே
நித்தமும்
உயிர்த்தெழ
துடிக்கிறேன்
உயிரே
எனைப் பிரியாதே,,,
___
முகம் சிவக்கிறது
தாமரைக்கு
உன்
சிறு கோபத்தை
சேமித்து வைக்கிறேன்
நான்,,,
___+___
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர் நன்று!
ReplyDeleteநன்றி ஐயா!
ReplyDelete