Thursday, June 25, 2015

காதல் துளிகள்

உயிரை
வாங்கும்
கவிதைக்கு
உனது பெயரையே
சூட்டுகிறேன்
இம்சைகள்
மிக பிடிக்கும்
என்பதால்,,,

___

இளங்கதிர்
உதயம்
என்னவளின்
கழுத்தில்

___

கசியும்
மௌனம்
உள்ளே
தோய்ந்த
இதயம்

___

அவளின்
நினைவுகளில்
மிச்சமிருப்பது
என் காதல்
மட்டுமே,,,

___

நீலம்
கரைதொடும் முன்பே
நித்தமும்
உயிர்த்தெழ
துடிக்கிறேன்
உயிரே
எனைப் பிரியாதே,,,

___

முகம் சிவக்கிறது
தாமரைக்கு
உன்
சிறு கோபத்தை
சேமித்து வைக்கிறேன்
நான்,,,

___+___

2 comments:

  1. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர் நன்று!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...