பழுத்த கனிகளின்
ருசிதேடிய
பெருத்த உடலின்
நாக்கு,,,
சுவை விரும்பி
சுற்றத்தாரை மிதித்து
வாழ கற்றிருக்க,,,
தன்பெருத்த உடலை தூக்கிக்கொண்டு
திரிகிறது
அச்சுவை விரும்பி,,,
கடற்கரையெங்கும் நடைபயிற்சிப்
பாதச் சுவடுக்குள்
சிக்கித் தவிக்கும்
சேர்ந்த கொழுப்புகள்,,,
திசைகளெங்கும்
காணவில்லை
தேவைக்குதவும்
கரங்கள்,,,
நோக்கும் முகங்களெல்லாம் ஏதோவொரு
ஏக்கங்களோடும், எதிர்பார்ப்புகளோடும்,,,
பெருத்த உடல்களுக்கு மட்டும் அழகாய்த் தெரிகிறது உலகு,,,
பழுத்த கனிகள் பார்த்தவுடன் கிடைப்பதனால்,,,
பணத்தின் மதிப்பு
மனிதாபத்தை
விற்றது
ஏழைக்கு தெரியவாப் போகிறது,,,
காய்ந்த கனிகளைத்
தேடுகிறது
ஏழையின் கண்கள்
வறுமையில்
வாடிய வயிறுக்காக,,,
காய்ந்த கனிகளும்
ஏழையை ஏமாற்ற
விதைகளைத்
தேடுகிறது கண்கள்
அவசர அவசரமாய்,,,
கிடைத்த விதைகளில்
ஏதேனும் ஊட்டச்சத்து ஒளிந்திருக்குமா
அப்போதைய
வயிற்றுப் பசிக்கு,,,
என்றேனும் ஒருநாள்
ஏழைக்கு படையலாகும்
ஆசையோடும் அன்போடும்
அரவணைப்போடும்,,,
மிதித்து வாழும்
பெருத்த உடல்களிடம்
தோற்று தோற்று
மீண்டெழ துடிக்கிறது
பழுத்த கனிகள்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment