என் இமைகளை
திறந்தே வைத்திருக்கிறேன்
இரவில்
தூக்கம் பிடிக்கவில்லை எனக்கு
தூரத்தில் குயிலொன்று கூவக்கேட்டேன்
தன் காதலியை
பிரிந்த குயிலாக இருக்கலாம்
துக்கம் தெரிந்தது
அதன் குரலில்
எனக்குள் ஆன
வியப்பில் விழிகள்
தானே பிதுங்கக்
கண்டேன்
இரவில் குயிலோசையா!
குழந்தை மனமல்லவா
அதற்கு!
தனிமையில் நானிருப்பதாக உணரவில்லை
துணைக்கு குயிலிருப்பதனால்
நானும் அதுவும்
பிரிந்த காதலால் ஒன்றானோம்
இரவில் நான் விழித்திருக்க
எனை பிரிந்த
காதலியின் அழியாத
நினைவுகளென்று
குயிலுக்கும் தெரிந்திருக்குமோ
இயற்கையின் படைப்பிதுதானோ
எத்தனையோ கனவுகளையும்
நினைவுகளையும்
சுமந்தபடியே
நானும்,குயிலும், காதலும்,இரவும்
என்னிரவுக்கு
வருகை புரிந்த
குயிலை
காலையில் காணவில்லை
என் கல்லறையில் தேடுகின்றேன்
குயிலை
மரணம் கண்டும்
மனம் மகிழ்சியில்
புதைத்து விட்டார்கள் எனதருகில்
குயிலை
காதலுக்கு இரு
சாட்சிகள் தேவையாம் காதலை
பிரித்தவர்களே எனதருகில் புதைத்து விட்டிருக்கிறார்கள்
குயிலை
ஏ!
காதலே
பிரிவின்
வலியை குயிலுக்கு உணர்த்திய நீ!
மனிதனுக்குணர்த்த
மறந்தது ஏனோ
மன்னிக்க இயலவில்லை
என்னால்
தண்டனை நானுக்கு தருகிறேன்
எம்மிருவர்
கல்லறைக்கும்
நீதான் இன்றுமுதல்
காவலாளி,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

அற்புதம்
ReplyDeleteமீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி ஐயா!
ReplyDelete