Thursday, October 01, 2015

வலுசேர்ப்போம் சகோதரி கௌதம மீனா அவர்களின் போராட்டத்திற்கு,,,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும்
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டினை சேர்த்தமைக்காக அண்ணல்
அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சாதியினத் தலைவராக சித்தரித்தும் , இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தினை எதிர்த்தும் , புறக்கணித்தும் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆதிக்க மனநிலை கொண்ட உயர்குடி வர்க்கத்தை
எதிர்த்துப் போராட எங்களுக்குத் தேவையான ஒன்றாக இருப்பது " இட ஒதுக்கீடு
பிச்சை அல்ல அது எங்களுக்கான உரிமை" எனும் முழக்கம் மட்டுமே , முற்றிலும்
முதலாளித்துவத்தை மையப்படுத்தியும், சாதிமத வாதத்தினை மையப்படுத்தியும்
இயங்கும் மத்திய மோடி மற்றும் மாநில ஜெ அரசிடமிருந்து தாழ்த்தப்பட்ட
மற்றும் பிற்படுத்தப்பட்ட உரிமைகளையும், இட ஒதுக்கீடு சட்டத்தையும் மீட்க
வேண்டிய கட்டாயத்தின் பேரில் தற்போது எங்களின் உடன்பிறவா சகோதரி கௌதம
மீனா அவர்கள் களமாடிக்கொண்டிருக்கி­றார் . சாகும் வரை உண்ணாவிரதம் எனும்
புரட்சி ஆயுதமே தற்போதைய தேவையாக இருக்கிறது. அதன்படியில்

எங்கள் சகோதரி கொளதம மீனா அவர்கள் இந்திய அறிவுசார் சொத்துரிமை துறையில்
இட ஒதிக்கீட்டை நடைமுறைத்தகோரி தொடர்ந்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப்
போராட்டத்தை மேற்கொண்டுவருகிறார்.­.அவரின் உடல்நிலை மிகவும்
மோசமாகிகொண்டே வருகிற நிலையில் சகோதரி கொளதம மீனா அவர்களின் கரத்தை
வலுப்படுத்துவது முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் அடிமைச்
சமூகத்தின் கடமையாக இருக்கிறது . அவரின் போராட்டம் நமக்கான
போராட்டம்..அடுத்த தலைமுறைக்கான போராட்டம் . இட ஒதிக்கீடு பிச்சை அல்ல
நமக்கான உரிமை... எனும் முழக்கத்தோடு உண்ணாவிரதப் போராட்டத்தை வலுவடையச்
செய்திடல் வேண்டும். சகோதரி கௌதம மீனா அவர்களின் உண்ணாவிரதப்
போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஐய்யா நல்ல கண்ணு அவர்களும் விசிக
தலைவர் திருமாவளவன் அவர்களும் தங்களின் ஆதரவினை தெரிவிக்கும் வகையில்
சகோதரி அவர்களை சந்தித்து கரம் கொடுத்திருக்கிறார்கள­் . வர்க்கச்
சுரண்டலுக்கு எதிராகவும், பறிக்கப்படும் உரிமையை
மீட்டெடுக்கும்படியாக­வும் மக்கள் ஆதரவு சகோதரி கௌதம மீனா அவர்களுக்கு
அளிக்குமாறு அரைகூவல் விடுக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு உரிமை
மீட்டெடுப்புக் களமாக
இடம் ... அறிவுசார் சொத்துரிமைத் துறை அலுவலகம் முன்பு ,கிண்டி
பேருந்துநிலையம்அருகி­ல்... அணிதிரள்வோம் ஆதிக்கத்தை எதிர்த்தும், இட
ஒதுக்கீடை மீட்கவும்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...