Saturday, October 03, 2015

கடவுளெனும் மிருகத்திடம்

சகலமாய் பேசி
என் பக்கம் இழுத்துவிட
ஓர் பட்டத்தை
துணைக்கழைத்தேன்

அதன் மாஞ்சாக் கயிறு
மரணத்தின் சாவியெனத் தெரியாமல்

தளர்ந்து போன இதயத்திற்கு தெளிவென்பது தேவையானதால்
கடைக்கோடியில்
நின்று கையசைக்கும்
குழந்தையிடம்
கேட்டு வாங்கிக்கொள்கிறேன்
என் தைரியத்தை

கழுமரத்தில் என் வரவினை எதிர்நோக்கி காத்திருக்கும் கைதிகளின் ஊடே
மனசாட்சிகள் என்னை
முன்னோக்கி விட

அவர்களின் பார்வையிலிருந்து
நான் மறைந்து போகவில்லை
மனிதனாய்
பிறந்துவிட்ட
காரணத்தினால்

ஆட்சியதிகாரத்தோடு
அரியணையில்
வீற்றிருக்கும் அந்த மிருகத்தின் முன்னால்

ஏதுமற்ற நிராயுதபானியாக
நிற்கிறேன் நான்

மண்டியிடு இல்லையேல் மரணித்துவிடு
என்கிறது அந்த
மிருகம்

மிச்சமிருக்கும் ஒரே
ஆயுதத்தை அம்மிருகத்தின் மேல்
பிரயோகப்படுத்தப் போகிறேன்

செயலற்றுப் போவது
என்சொல்லா?
இல்லை
மிருகத்தின் மிகை எச்சரிக்கையா? நானறேன்

சொல்லத் துணிந்துவிட்டேன்

கடவுளாய் அவதரித்திருக்கும்
மிருகமே மண்டியிடப் போவதில்லை உன்னிடத்தில்

நீயும்
மனிதனாக மாறிவிடு
மனிதமிங்கே மடை திறக்கட்டும்

சொல்லி முடித்தேன்
செயலற்றுப் போனது
மிருகம்

காலத்தின்
கட்டாயத்தால் கட்டளையிட்டது
மிருகம்

கைதிகளை உடனே
விடுதலை செய்
என்று,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...