சகலமாய் பேசி
என் பக்கம் இழுத்துவிட
ஓர் பட்டத்தை
துணைக்கழைத்தேன்
அதன் மாஞ்சாக் கயிறு
மரணத்தின் சாவியெனத் தெரியாமல்
தளர்ந்து போன இதயத்திற்கு தெளிவென்பது தேவையானதால்
கடைக்கோடியில்
நின்று கையசைக்கும்
குழந்தையிடம்
கேட்டு வாங்கிக்கொள்கிறேன்
என் தைரியத்தை
கழுமரத்தில் என் வரவினை எதிர்நோக்கி காத்திருக்கும் கைதிகளின் ஊடே
மனசாட்சிகள் என்னை
முன்னோக்கி விட
அவர்களின் பார்வையிலிருந்து
நான் மறைந்து போகவில்லை
மனிதனாய்
பிறந்துவிட்ட
காரணத்தினால்
ஆட்சியதிகாரத்தோடு
அரியணையில்
வீற்றிருக்கும் அந்த மிருகத்தின் முன்னால்
ஏதுமற்ற நிராயுதபானியாக
நிற்கிறேன் நான்
மண்டியிடு இல்லையேல் மரணித்துவிடு
என்கிறது அந்த
மிருகம்
மிச்சமிருக்கும் ஒரே
ஆயுதத்தை அம்மிருகத்தின் மேல்
பிரயோகப்படுத்தப் போகிறேன்
செயலற்றுப் போவது
என்சொல்லா?
இல்லை
மிருகத்தின் மிகை எச்சரிக்கையா? நானறேன்
சொல்லத் துணிந்துவிட்டேன்
கடவுளாய் அவதரித்திருக்கும்
மிருகமே மண்டியிடப் போவதில்லை உன்னிடத்தில்
நீயும்
மனிதனாக மாறிவிடு
மனிதமிங்கே மடை திறக்கட்டும்
சொல்லி முடித்தேன்
செயலற்றுப் போனது
மிருகம்
காலத்தின்
கட்டாயத்தால் கட்டளையிட்டது
மிருகம்
கைதிகளை உடனே
விடுதலை செய்
என்று,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment