பின்னால் தொடரும்
நிழல் மறைகிறது
பூமிதொடும்
அன்பெனும் நிஜங்களை
பார்த்து,,,
_______
இதயம் தொலைத்து
நின்றேன் இனியவளே
உனக்காக,,,
காதல் கண்களை
மூடியது காட்சிகள்
இங்கு பிழையாக,,,
_______
தன்னை மறந்து
மண்ணை நேசிக்கும்
காற்றிடம் தன் காதலை
சொல்லத் துடிக்கிறது
இயற்கை,,,
_______
நட்பை விதைக்கும்
எந்த கணங்களும்
ரணங்களானதில்லை
உண்மையான
நட்பில் விரிசல்கள்
விழுந்ததில்லை,,,
_______
பார்த்தவுடன்
பன்னீரை
தெளித்துவிடுகிறாய்
உச்சத்தில் என்
உயிர் நனைகிறது,,,
_______
தாமாக அமைவதல்ல
வாழ்க்கை
அதுவொரு தேடலின்
சிறுபகுதியாக,,,
பனிச் சாரலில்
வெடித்த இரவுகள்
சுழன்ற நிலவிடம்
சூழ்ச்சிகள்
பலிக்கவில்லை
பத்திரமாய் இறக்கிவிட
பஸ்பமாகிறது
நட்சத்திரம்,,,
என்னைக் கடந்து
செல்பவனே
வதைக்காதே
உன்பார்வையில்
விளைந்தவள் நான்
மலர் தருவாய்
என் பெண்மை
மலர்ந்திட,,,
_______
திட்டாதீர்கள்
மரங்களே என்னை
காகிதங்களை
எரிப்பவன் நானல்ல
வடிக்கிறேன் கண்ணீரை
கவிதையாக,,,
_______
எமன் வீசிய
பாசக்கயிறு
உறுதியற்றதாய்
எளிதில்,,,
எழுதிவைத்தாய்
காதலிக்கிறேன்
உன்னையென்று,,,
_______
தூவலின்
ஒளிச் சிற்பம்
நிறப்பிரிகை
நகைச்சுவையாகிறது,,,
_______
தயவு
தாட்சனைகள்
தாழிட்டிக்கொண்டன
தவறுகள்
தட்டில்
தட்சனையாக,,,
_______
நெகிழியில்
மழைத் துளி
மரணத்தை
தழுவியது
-மண்
_______
மனம்விட்டுப்
பேசுங்கள்
மனதை
விட்டுவிட்டு
பேசாதீர்கள்,,,
_______
சாரல்
கிழவியின் தளர்ந்த
உடலில்
கிழிந்த சீலை
காற்றை
நிறுத்துகிறது,,,
_______
மர்மம்
அவிழ்க்கப்படவே
இல்லை
மனதின் ஆழத்தால்
அவளே
பெண்ணாக,,,
_______
கட்டிய கணவன்
நானிருக்க
கண்டாங்கி சேலை
எதுக்கடி
ஒட்டிக்கொள்
என்னையே
ஆடையாக.,,
_______****_______
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

"கட்டிய கணவன்
ReplyDeleteநானிருக்க
கண்டாங்கி சேலை
எதுக்கடி
ஒட்டிக்கொள்
என்னையே
ஆடையாக..." என்ற
அழகான அருமைான வரிகளை
வரவேற்கிறேன்!
நன்றி தோழர்!
ReplyDelete