Saturday, October 03, 2015

பொம்மை மழைத்துளி

பார்வையில் மின்னும்
பளிங்கு கற்களைப்போல
காட்சிக்குத் தெளிவாய்
கையில் ஒரு துளி

கரங்களை விரித்துவிடு
என்போல் பல துளிகள்
உன்னை பற்றிக்கொள்ளும்
என்கிறது அந்த மழைத்துளி

புத்தம் புதியதாய்
பூமிக்கு புதுவரவாய்
தனக்கே சொந்தமான
புதுமை ஜாலம் காட்டும் பொம்மையினை கண்டதும்

பூக்கும் புதுமலராய் புன்னகையோடு அப்பொம்மையோடு விளையாடும்
மழலை நெஞ்சத்தில் நஞ்சேதும்
நாம் கண்டதில்லை
அல்லவா

அதுபோலவே
கரங்களை
பற்றிக்கொண்டது
அந்த மழைத்துளி
எனக்கது
புதுபொம்மையாய்

உடைந்த
பொம்மைக்காக
அழும் மழலையின்
அதே பாசத்தோடு
அழுது விடுகிறேன்
கரங்களில் மழைத்துளி கரையும் போது

பெய்த கனமழை
பட்டென நின்றதும்
நிசப்த பெருவெளியின்
நடுவில்
பித்தம் பிடித்தவனாய்
தனிமையை வெறுத்தவனாய்
தத்தளித்திருக்க

போனதை திரும்ப
அழைக்கிறேன்
என் கண்ணீரின் வெப்பத்தை
கார்மேகம் கண்டு
உருகத் தொடங்கியது
மீண்டும் பெருமழையாய்

எனை முழுதாய் அணைத்து முத்தத்தால்
கண்ணீரை துடைக்கிறது
முகத்தில் விழுந்த மழைத்துளிகள்

இந்த அரவணைப்பு போதுமெனக்கு இனி இம்மண்ணில்
நானொரு
நதியாய், கடலாய்,
மரஞ்செடி கொடியாய்,
தவழ்ந்து வந்து
விளையாடுவேன்
தண்ணீர் கிடைத்த
மகிழ்சியில்

புத்துணர்வோடு
பூமிக்கு படியளப்பேன்
பசி தீர்க்கும் விவசாயியாய்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...