பார்வையில் மின்னும்
பளிங்கு கற்களைப்போல
காட்சிக்குத் தெளிவாய்
கையில் ஒரு துளி
கரங்களை விரித்துவிடு
என்போல் பல துளிகள்
உன்னை பற்றிக்கொள்ளும்
என்கிறது அந்த மழைத்துளி
புத்தம் புதியதாய்
பூமிக்கு புதுவரவாய்
தனக்கே சொந்தமான
புதுமை ஜாலம் காட்டும் பொம்மையினை கண்டதும்
பூக்கும் புதுமலராய் புன்னகையோடு அப்பொம்மையோடு விளையாடும்
மழலை நெஞ்சத்தில் நஞ்சேதும்
நாம் கண்டதில்லை
அல்லவா
அதுபோலவே
கரங்களை
பற்றிக்கொண்டது
அந்த மழைத்துளி
எனக்கது
புதுபொம்மையாய்
உடைந்த
பொம்மைக்காக
அழும் மழலையின்
அதே பாசத்தோடு
அழுது விடுகிறேன்
கரங்களில் மழைத்துளி கரையும் போது
பெய்த கனமழை
பட்டென நின்றதும்
நிசப்த பெருவெளியின்
நடுவில்
பித்தம் பிடித்தவனாய்
தனிமையை வெறுத்தவனாய்
தத்தளித்திருக்க
போனதை திரும்ப
அழைக்கிறேன்
என் கண்ணீரின் வெப்பத்தை
கார்மேகம் கண்டு
உருகத் தொடங்கியது
மீண்டும் பெருமழையாய்
எனை முழுதாய் அணைத்து முத்தத்தால்
கண்ணீரை துடைக்கிறது
முகத்தில் விழுந்த மழைத்துளிகள்
இந்த அரவணைப்பு போதுமெனக்கு இனி இம்மண்ணில்
நானொரு
நதியாய், கடலாய்,
மரஞ்செடி கொடியாய்,
தவழ்ந்து வந்து
விளையாடுவேன்
தண்ணீர் கிடைத்த
மகிழ்சியில்
புத்துணர்வோடு
பூமிக்கு படியளப்பேன்
பசி தீர்க்கும் விவசாயியாய்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment