அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிதறிய பவழ
முத்துக்களை
சிரமப்பட்டு
சேர்க்கிறேன் சீக்கிரம்
கோர்க்க வேண்டும்
ஒரு மாலையை
மலர் மல்லிகை
என் மடியில்
தவழ்ந்து விளையாட
சம்மதம் தெரிவிக்கும்
நாள்வரையில்
நான் காத்திருக்கப்
போவதில்லை
என் காதலொன்றும் வலுவிழக்கவில்லை
சீக்கிரம் கோர்த்து விட வேண்டும்
ஒரு மாலையை
அழகின் புன்சிரிப்பால்
நன் மதியினை
மயக்கச் செய்யும் நிலவிடமிருந்து
நான் விலகியாக வேண்டும்
வழிவிடு என்று வார்த்தைகளால் சுட மனமில்லை
எனக்கு
நிலவும்
அவள் முகமும்
ஒன்றாக பட்டதனால்
என் பாதையில்
குறுக்கிடும் மலர் வண்டுகளே
மண்ணை கொஞ்சம்
சீண்டித் தாருங்கள்
பவழ முத்துக்கள்
அவை புதையுண்டு
கண்கட்டி வித்தை
காட்டுகின்றன
கண்டுபிடித்துத் தாருங்கள்
சீக்கிரம் கோர்க்க வேண்டும் ஒரு மாலையை
பாடும் பறவைகளே
பார்த்து
பொறுக்குங்கள் இரையை
விதைகளென
நினைத்து
என்
பவழ முத்துக்களை
அழகான அலகால்
கொத்தி விடப்போகிறீர்கள்
மணிக்கண்ணால்
நீங்கள்
பார்த்து விட்டால்
மறக்காமல் கொடுத்துதவுங்கள் என்னிடத்தில்
எந்தன் பவழ முத்துக்களை
சீக்கிரம் கோர்க்க வேண்டும்
ஒரு மாலையை
பல சோதனைகள்
கடந்து நானும்
சொல்லிவிட்டேன்
காதலை
அவளிடத்தில்
பல கேள்விகளால்
எனை துளைத்து மனதால் அவளும்
எனை ஏற்று கேட்டுவிட்டாள்
ஒரு பவழ முத்து மாலையை
மனைவியாகப் போகிறாள்
மாலையை கோர்த்து விட்டேன்
மடியில் நானும் சிறுபிள்ளையாக
காதலின் பூமாலைகள்
நம்கழுத்தினை அலங்கரிக்கையில்
சிரமப்படுதலில் கூட சுகம் இருக்கத்தான் செய்கிறது,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

அருமை
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete