அடுத்த நிமிடமே
அழத்துடிக்கும்
மனங்களுக்காக
ஏதோ ஓரிடத்தில்
மடைகளைத் திறந்தே
வைத்திருக்கிறது
அன்பெனும் நேசம்
தாவிக்குதித்து
பெருங்கோபம் தவிர்த்து
அமைதியாய்
ஆனந்தமாய்
தேன் சுரக்கும்
பூக்களின்
நறுமணங்களாய்
நேசமிங்கே
யார் கண்ணிலும்
படாமல்
ஓர் அழுகையின்
கண்ணீரைத் துடைக்கும்
கைக்குட்டையாகிறது
யாருக்காக அழுகிறது
இந்த மனம்
ஆராய்ச்சியின் முடிவில்
இலக்கணங்கள்
உடைகின்றன
இமைகளின் துடிப்புகளை
அன்பெனும் ஆழ்கடல்
அள்ளி அணைக்கிறது
சிந்தப்படும் கண்ணீரில்
அடுத்தவர் படும்
வேதனைகளை அளவாக
படிக்கிறது இந்த
அன்பெனும் நேசம்
இவன்,இவள்,
இவர்கள்,இதற்குத்தான்
கண்ணீர் சிந்துகிறார்கள்
எதற்கெனும்
கேள்விகளுடைந்து
மனிதாபிமானமாக
அன்பின் பிறப்பிடமாக
மனிதம் போற்றுவதாக
எங்கும் நிறையும்
கண்ணீரின் கரிசனங்கள்
சனங்களை திட்டாதீர்கள்
சன்னல்களை
மூடாதீர்கள்
கண்ணீர்கள் நேசத்தின்
கால்களை தொட்டுத்
தழுவுகிறதே அன்றி
வாரிவிடுவதற்காக
அல்ல
ஒரு கணம்
அந்த ஒரு கணம்
அடுத்தவருக்காக
அழுகின்ற மனங்களின்
அழுக்குகளை
துடைக்கிறது என்
நேசத்து அன்பெனும்
ஆகாசப் பறவைகள்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment