காற்றசைவின்
சப்தங்களையும்
மறந்து போயின
மரங்கள்
புத்தகங்களை
புரட்டும் கைகள்
இசைத்துக்
கொண்டிருந்தது
ஓர் அழகான
அனுபவத்தை
உள்ளே
மேசை நாற்காலியில்
வாழ்க்கைப் பாடம்
கற்கும் பள்ளிச்
சிறுவர்களும்
கல்லூரிக்
கனவாளர்களும்
ஒரு புரத்தில்
தான் பெற்ற
ஏற்கனவே அனுபவித்த
வாழ்க்கையின்
மனச்சாரல்களை
அசைபோட்டும்
இனி வாழப்போகும்
காலத்திய கனவுகளை
அலசியும்
ஆத்மார்த்தமாய்
புத்தகம் வாசிக்கும்
முதியோர்கள்
ஒரு புரத்தில்
எழுதியும்
எழுதப்படாமலும்
எழுத்தின் மூச்சினை
எப்போது வேண்டுமாலும்
உட்கொள்ளப்படலாம்
என்கிற ஆவலோடு
ஆங்காங்கே குறிப்பெழுத
வைத்திருக்கும்
பேனாக்களும்
நோட்டுகளும்
அவரவரிடத்தில்
தன் அறிவுக்கு எது
வேண்டுமென்பதை
ஏற்கனவே முடிவு
செய்துவிட்ட
மூளையின் சொல்படி
புத்தக தலைப்புகளையும்
எழுதிய
படைப்பாளியையும்
தேடி நகரும் புத்தக
மேய்ப்பர்கள்
ஆங்காங்கே
யாருக்கு என்ன
வேண்டும் எவ்விடத்தில்
எந்த புத்தகம் உள்ளது
எத்தனை புத்தகம்
சுற்றுலா சென்றுள்ளது
வாசிக்கப்படும்
புத்தகங்களை
குறிப்பெடுப்பது
சீர்மரபில்
அலமாரிகளில்
புத்தகம் அடுக்குவதென
அத்தனை பெருஞ்சுமை
வேலைகளையும்
ஓர் கால்முளைத்த
குழந்தை ஓடியாடி
துள்ளிக்குதிப்பதை போல
சிமரமின்றி செய்து
முடிக்கும் காப்பாளர்கள்
ஒரு புரத்தில்
அதுவரையில் அமைதியாகத்தான்
இருந்தது அந்த பூமியும்
அந்த நூலகமும்
அது சுற்றியிருந்த
மரங்களும்
அப்போதுதான்
வீசினார்கள்
அந்த முதல்
பெருநெருப்பு
தீப்பந்தத்தை
எமது
யாழ் நூலகத்தில்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment