அனிச்சையாக
பார்த்தேன்
அவளை
என்னையே முறைத்து
பார்க்கிறாள்
நீண்ட நேரம்
ரசித்துவிட்டேனாம்
அவளை,,,
_______
திரும்ப திரும்ப
கழுத்து வலிக்கிறது
திசைகளில்
அவள் முகமென
திரும்பி திரும்பி
பார்க்கிறேன்
பிரமையால்,,,
_______
கானல் நீருக்கு
தூதுபோன
மரங்களை
அழைக்கிறேன்
என் காதலுக்கும்
தூதனுப்ப
அவள் முகம்
நிரம்பிய சாலையில்
என் பயணம்
_______
பூக்களை பறிக்காமல்
அப்படியே
ரசித்துவிடுகிறேன்
அவனிடம் சொன்ன
பறிப்பது பிடிக்காதெனும்
ஒரு பொய்யினால்,,,
_______
நிஜமாக இது
காதலா
நம்பமுடியவில்லை
நிழலாடும்
நிஜங்களில்
எல்லாம்
உனது பெயராகவே
தெரிகிறதே,,,
_______
மீனுக்கு புழு
கோர்க்கையில்
முள்ளாக மறைகிறாய்
தூண்டிலை
பிடித்திழுப்பது
நம் இருவரின்
கைகளும்தான்,,,
_______
மேகச் சிதறலில்
ஒவ்வொன்றும்
வெவ்வேறு
உருவமாய்
எங்கே நீயென
தேடுகையில்
மேகம் கைகாட்டுகிறது
என் இதயத்தை,,,
_______
சினுங்கிய
பூக்களிடத்தில்
காட்டினேன்
உன் புகைப்படத்தை
போதுமா
பார்த்தது என்றால்
பதிலேயில்லை
பூக்களிடத்தில்,,,
_______***_______
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக ...

No comments:
Post a Comment