கற்காலம் செதுக்கிய
கல்லறையில்
நிகழ்காலம் வீழ்ந்து
கிடக்க
எதிர்காலம்
காத்திருக்கிறது
மரணத்தின்
வருகைக்காக
கருவை அழிக்கவும்
அணுவை பிரயோகித்து
அவசரமாய் மேலெழும்
புகை மண்டல
யாகத்தீயை
வளர்த்தார்கள்
அணுவிஞ்ஞானி
எனும் பெயரோடு
குழந்தைகளும்
தாய்மார்களும்
தகப்பன்களும்
துடிதுடித்து போனார்கள்
தூது போனது
தவறென்று அறியாமல்
வீசப்பட்ட
அணுகுண்டுகளின்
முகத்தில் தெறிக்கிறது
ஏகபோகமாய்
சிரிப்புகள்
பக்கத்தில் மனிதனை
விழுங்கும் கண்கொத்தி
பாம்புகள்
அலறுகிறது அதன்
தவிப்பிலேயே
மனிதம்
எது அவசரப்படுத்தியது
அவர்களை
எது ஆதரிக்கச் செய்தது
அவர்களை
எது கற்பித்தது
அவர்களுக்கு
அணு என்றுமே ஆபத்தில்லையென்று
மண்தான் நம்மண்தான்
நமக்கானதாக
இல்லை எனும்
அவசர செய்திக்குள்
முடங்கிப் போகும்
மனிதர்களிடத்தில்
மிருகங்களும்
முறையிடுகின்றன
நாங்களென்ன
தவறிழைத்தோமென்று
முடிவை தேடிக்கொண்டு
தண்டனைக்கு
வரிசையாக
இலட்சோபலட்சம்
கும்மிடுகள்
இன்னமும்
போடுகிறார்கள்
அணுதான்
நாம் வாழும்
பூமியின் பிரதான
கண்டுபிடிப்புக்கு
ஆகச் சிறந்த
உதாரணமெனும்
ஆமாம்சாமி!
ஆமாம்சாமி!
ஆமாம்சாமியை,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

நண்பரே! வணக்கம். இன்றுதான் உங்கள் தளத்தைப் பார்க்க வாய்த்தது. வாருங்கள் இணையத்தமிழால் இணைவோம்.தொடர்கிறேன், தொடருங்கள் - நா.முத்துநிலவன்.
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete