தூக்கம் விற்ற இரவுகள்
முழுக்க
எழுதிக்கொண்டுதான்
இருக்கிறேன்
கவிதைகளை
எனது எந்தக்
கவிதைகளும் இரவில்
தூங்கிக் கழித்ததாய்
புலப்படவில்லை
புரண்டு புரண்டு
தேய்ந்து போன
தரைகளில்
பாயும் தலையணையும்
எழுதிய கவிதைகளை
வாசித்துக்
கொண்டிருக்கையில்
வாத்தியங்களை
முழங்கிக்கொண்டு
முன்றாம் பிறையினை
ரசித்து விடுகிறதென்
எழுதுகோல்
கர்வம் கொஞ்சம்
கூடுதலாக
கண்ணிமைகளை
மூடாத முகத்திற்கு
முன்னால்
எழுந்தாடுகிறது
எழுதுகோல்
பரிதாபமாக நான்
அதனிடத்தில்
கேட்கிறேன்
இப்படி குடிக்கிறாயே
என் இரவுகளை
ஆறுதலுக்கேனும்
ஒரு தாலாட்டு
பாடக்கூடாதா?
கவிதை சுமந்த
காகிதமும் காற்றில்
நடனமாட கூடவே
இசையையும்
மீட்டெடுக்க
எழுதுகோல் எனக்காக
தலாட்டு பாடியது
எனது கவிதைகளையே
எடுத்துக்கொண்டு
தூக்கம்
அப்போதுமில்லை
தூங்கிப்போனால்
தடைபடுமே
எனது தாலாட்டு
கவிதைகள்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment