கருவில் கத்தி
பணம் கேட்டு
மிரட்டுகிறது
நவீன வழிப்பறி
மருத்துவம்,
மருத்துவ கல்லூரிகள்,,,
__________
அடுக்கி வைத்த
கோப்புகள்
சத்தமில்லாமல்
அழும் அறிக்கைகள்
அனைத்தும்
போலி பிரேத
பரிசோதனைகளாம்,,,
__________
காற்றுக்கு வேலி
கண்களை
திறக்க விடவில்லை
தூசிப் புழுதிகள்,,,
__________
படம் தூக்கி காட்டும்
பாம்பு
பயத்தில்
பக்தி மட்டும்
மனிதனுக்கு,,,
__________
தரைமேல் நட்சத்திரம்
பூக்களை கவரும்
பனித்துளிகள்,,,
__________
பிச்சைக்கு
வரிசையாய்
விளைநிலங்கள்
தொங்கும்
பலகையில்
திருவோடு
வாடகைக்கு,,,
__________
வெந்து கிடக்கிறது
பூமி
சுடுநீர் ஊற்றும்
எரிவாயு
குழாய்கள்
கெயில்
குளிர்காய்கிறது,,,
__________
நாயும்
குழந்தையும்
குப்பைத்தொட்டியில்
-நவீன சமபந்தி,,,
__________
கையில்
மினரல் பாட்டில்
சுற்றிப்பார்க்க செல்கிறார்கள்
மழை வெள்ளத்தை,,,
__________
புதிய கட்சி தொடக்கம்
ஜாக்கிரதை
அரைஞான் கொடி,,,
__________
மக்களை மறந்து
அரசியல் மன்றத்தில்
மட்டும் அரசாட்சி
சாட்டையை
சுழற்றுகிறது
அதிகாரம்,,,
__________
இடுப்புக் கோவணம்
கொடிக் கயிற்றில்
காய்கிறது
வறுமை,,,
__________***__________
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment