தலித்துகள் மலம் அள்ளும் இழிதொழிலை செய்வதும்,
பெண்கள் மட்டுமே தன் குடும்ப வீட்டுக் கழிவறையை
கழுவதும்
ஒப்பிட்டளவில் இரண்டும் வேறுவேறு,
முதல் திணிப்பு
சமூகம் சார்ந்த ஆதிக்கம்.
அதில் ஆண் பெண் பேதமில்லை.
இரண்டவது திணிப்பு ஆணாதிக்க மனோபாவம்
அது வேண்டுமென்றே
ஆதிக்கம் செலுத்துவது.
ஒரு பெண் தன் குடும்ப வீட்டுக் கழிவறை சுத்தம் செய்தல் தனக்கு
பழகிப்போனதென்று, கருதி சக பெண் மலம் அள்ளுதலுக்கு உதவப்போவதுமில்லை,
கரம் நீட்டவும் தயாராக இல்லை, என்பதால்
முதல் எதிர்ப்பு சமூகப்பிரச்சனையாகிறது.
ஒரு ஆண் தன் துணைவியர் கழிவறை சுத்தம் செய்கிறாள் என்றால் உதவி செய்யவோ ,
வேலையை பகிர்ந்து கொள்ளவோ தயாராக இல்லை என்றால் அச்சு அசல் அது
ஆணாதிக்கமே,,,ஒரு வேளை அவ்வாறு வேலை பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் ஆண் பெண்
இருவருமே அதே பாணியான
சக மனிதன் மலம் அள்ளுதலுக்கு உதவப்போவதுமில்லை,
கரம் நீட்டவும் தயாராக இல்லை. என்பதால் இரண்டும் வேறுபடுகிறது.
ஆனால் இரண்டுமே மிகக் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்,
இரண்டுமே ஆதிக்கத் திணிப்புதான் என்பதை
உணர வேண்டும்.இரண்டிலும் காணப்படும் " இவர்கள் இந்த வேலைக்குத்தான்"
என்கிற வேறுபாடற்ற பொதுக்கோட்பாட்டையும் உடைக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...
No comments:
Post a Comment