ஆளுங்கட்சி
திடீர் ஆய்வு
தரமான சாராயம்,,,
__________
ஐந்தாண்டு எம்எல்ஏ
வருகிறார் கைகழுவி
அடுத்த தேர்தலுக்கு,,,
__________
முற்றத்து நிலா
மலையேறுகிறது
காற்றில் கலந்த ஈரம்,,,
__________
சீண்டுகிறது
என்னை உண்மை
மறைத்து வைக்கிறேன்
பொம்மையில் மனதை,,,
__________
பிடித்த தாமரை
சேற்றுக் குளத்தில்
நானும் நாற்றமும்,,,
__________
அவையில்
திட்டங்கள் வாசிப்பு
தட்டிய மேசைகள்
உடைத்தன கைகளை,,,
__________
அதுவரையில்
மௌனம் காத்திருந்த
சருகுகள்
பேசத்தொடங்கின
காற்றனலோடு,,,
__________
பதவி சுகம்
பழகிப்போன கும்மிடு
வழக்கமான வருகை
தேர்தல் நேரம்,,,
__________
மிதக்கிறேன்
காற்றடைத்த பலூன்போல
குடித்துவிட்டு
தரையில்,,,
__________
கூட்டம் கூடி
தலைவனை
துதித்தார்கள்
தொண்டன்
அரைபோதையில்
அரசியல்
முழுபோதையில்,,,
__________
மனக்கோட்டையில்
புதையல்
நட்சத்திரங்கள்
வீதியிறங்கி
ஓட்டு கேட்கும்
வேட்பாளர்,,,
__________
அன்புக்கு
ஏங்கிய
முகங்கள்
தொலைத்த
வாழ்வு
கோரமாய்
சிரிப்பு,,,
__________
எனை தொடும்
தாமரை
எப்போதும் விசம்
கக்குகின்றது
காவி நிறத்தில்,,,
__________****__________
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment