Wednesday, February 17, 2016

தலித் இளைஞனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்

மிகத் தீவிரமாக முரண்பட்டு நிற்கும் இந்திய சமூகத்தில் "சமத்துவம்"
என்றுமே கேள்விக்குறியாகவே காலத்தை கடக்கின்றது.
ஓர் அடிப்படை சகோதரத்துவம் கூட இல்லாத சமூகத்தில் வாழ்ந்து சாதியத்தையும்
சாதிய திணிப்புகளையும் உள்வாங்கிக் கொண்டு
விலங்கினத்தை விட கேவலமாக அடிமைபடுத்தும் ஆதிக்கச் சாதி மனோபாவத்தில்
வளரும் கேடுகெட்டு மனித சமூகத்திடம் முதலில் விடுபட வேண்டியது
சாதியவாதமும், மதவாதமும் மட்டுமே,
இந்துத்துவ பார்ப்பானிய மனுதர்ம வர்ணாசிரமத்தை தன் முதுகில்
தூக்கிக்கொண்டு எதிர் படுவோரையெல்லாம் சுமையிறக்கச் சொல்வதில்
அர்த்தமில்லை, ஒன்று நீயாகவே சுமையை இறக்கிவிட வேண்டும் , இல்லை வாழ்வது
வீணென்று மரணித்துவிட வேண்டும். இந்த இருவழிகளில் ஏதேனுமொன்றை செய்தால்
வர்ணாசிரமம் செத்துவிடும் என்பதாலே இந்துத்துவம் முக்கியமாக சாதியத்தை
உயர்த்தி பிடிக்கிறது. நால் வர்ண சாதிய ஆதிக்கர்களும் குறிவைத்து
தாக்குமிடும் "தலித்" மக்களாக இருக்கிறது அதாவது வர்ணத்தில் இடம்பெறாத
ஆதிக்கர்கள் மொழியில் இழிசாதி எனும் பஞ்சமர்கள். இந்துத்துவ ஆதிக்க
வெறியர்கள் தங்களின் எல்லாவிதமான ஆயுதங்களையும் பிரயோகித்து கூர்முனை
சரியாக இருக்கின்றனவா,,, என பரிசோதனை செய்து பார்க்கும் இந்நாட்டில்
உண்மையில் வாழ்வதற்கு அஞ்சியவர்களாக தலித் சமூக மக்கள் தினந்தினம்
செத்துக்கொண்டிருக்கி­றார்கள். அதுவும் உடனடி மரணமில்லை சிறுகச் சிறுக
சித்ரவைதைகளை அனுபவத்து கொண்டு தன்வாழ்நாளை தலித் மக்கள் சபித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்தியத்தின் மிகப்பெரிய அவமானச்
சின்னமாகிறது. நிகழ்வுகளும் அவமானங்களை தாங்கிக்கொண்டு தன்பங்கிற்கு
காலத்தை கடத்திக்கொண்டு போகிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர்
மாவட்டத்தில் உள்ள தபவ்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விரேந்தர் குமார்
மிஷ்ரா. அதே கிராமத்தில் செங்கல் சூளை வைத்துள்ளார். அவரது செங்கல் சூளை
அருகே உள்ள நிலத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று மிஸ்ரா
திட்டமிடுகையில் அதற்கு அடிபணிய மறுத்திருக்கிறார் நில உரிமையாளர். இந்த
காரணத்தால் மிஸ்ரா அந்த நிலத்தின் உரிமையாளரிடம் பிரச்சனை செய்து
வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மிஸ்ரா தனது செங்கல் சூளையில்
வேலை செய்யும் இருவருடன் சேர்ந்து பக்கத்து நிலத்தின் உரிமையாளரின்
பதின்வயது மகனை அடித்து நொறுக்கி செருப்பு மாலை அணிவித்துள்ளார்.
செருப்பு மாலையுடன் தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த வாலிபரை அவர் ஊர்வலமாக
இழுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த வாலிபரின் தந்தை இது குறித்து
போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் மிஸ்ரா மற்றும் அவரது ஊழியர்கள் 2 பேர் மீது
வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்படியும் காவல்துறை SC/ST வழக்கு பதியாமல் ஆதிக்கச்
சாதியர்களுக்குச் சாதகமாக கட்டப்பஞ்சாயத்தோ அல்லது சாதாரண குற்றப்பிரிவு
வழக்காகவோதான் பதிவு செய்யும் என்பது நன்கு அறியப்பட்டதாகவே இருக்கும்.
இங்கே சாதியம் என்ன சொல்கின்றதோ அதன்படியேதான் சட்டமும் எழுதப்படுகின்றது
என்பதை அறிந்து தலித் சமூக மக்கள் தங்களுக்கான உரிமைக் கோரிக்கையினை
இன்னும் வலுவடையச் செய்திடல் வேண்டும்

4 comments:

  1. உண்மைதான் சார்.. அதுவும் தமிழகத்தை விட வட இந்தியாவில மிக மிக கொடூரமாக நடந்து வருவது (இன்னும்) கண்டிக்கத்தக்கது... எதிர்வினையும் தண்டனையும் கடுமை ஆக வேண்டும், குறிப்பாக இவ்வாறான விசயங்களில்..

    ReplyDelete
  2. தமிழகத்தை விட வட இந்தியாவில மிக மிக கொடூரமாக நடந்து வருவது (இன்னும்) கண்டிக்கத்தக்கது...
    #அங்கே தான் பெரியாரின் பணி ஆரம்பமாகிறது.
    தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. இந்த கொடுமையை செய்த அந்த செங்கல் சூளைக்காரன் விரேந்தர குமார்
    மிஷ்ரா என்பவன் ஒரு பார்ப்பான்
    The density of Mishra is more among Saryupareen Brahmins, Kanyakubja Brahmins, Sakaldwipi(Sakyadwipi) Brahmins, Maithil Brahmin, Bhumihar Brahmins, Utkala Brahmins and Upadhaya Brahmins in Nepal. Mishra are Brahman by cast in North India.
    https://www.google.co.in/webhp?sourceid=chrome-instant&ion=1&espv=2&ie=UTF-8#q=mishra%20is%20which%20caste

    பெரும்பாலும் இப்படிப்பட்ட கொடூர செயல்களை வடநாட்டிலுள்ள பார்ப்பனர்கள் அல்லது தாகுர்கள் எனப்படும் உயர்சாதியினரே அதிகமாக செய்கின்றனர்

    ReplyDelete
  4. கூடுதல் தகவல்களுக்கு
    நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...